சென்னை,ஆக.12- தமிழ்நாடு அரசால் வழங்கப்படும், சிறந்த மாநகராட்சிக்கான, முதலமைச் சர் விருதுக்கு, சேலம் மாநகராட்சி தேர்ந் தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளில், சிறப்பாக செயல்படும் மாநகராட்சிக்கு ரூ. 25 லட்சம் ரொக்கப்பரிசும், சிறப்பாக செயல்படும் முதல் மூன்று நகராட்சி களுக்கு முறையே, 15 லட்சம், 10 லட்சம், மற்றும் 5 லட்சம் ரூபாய் என சான்றிதழு டன், ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில், இந்தாண்டுக்கான சிறப்பாக செயல்படும் மாநகராட்சிக் கான, முதலமைச்சரின் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. இதேபோன்று, சிறப்பாக செயல்படும் நகராட்சி களுக்கான விருதுக்கு, தருமபுரி, வேதா ரண்யம், அறந்தாங்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சி மற்றும் சிறந்த முதல் மூன்று நகராட்சிகளுக் கான சான்றிதழுடன் கூடிய ரொக்கப் பரிசுகளை, வருகிற சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர் வழங்குவார் என்றும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.