சென்னை,நவ.3- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று களை நட தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும் என்று தமிழக அரசு தெரி வித்துள்ளது. தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப் படும் என்றும், அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தில் இருந்து ரூ.10.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.