tamilnadu

img

தீக்கதிர் கட்டுரைக்கு சின்னக்குத்தூசி விருது

சென்னை, ஜூன் 17 - பத்திரிகையாளர் சின்னக்குத் தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் 8-ம் ஆண்டு சின்னக்குத் தூசி நினைவு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில், எழுத்தாளர் கே.ஜீவபாரதிக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது ரூ.1 லட்சத்தை கவிஞர் வைரமுத்து வழங்கினார்.  தீக்கதிர் வண்ணக்கதிரில் 2018 நவம்பர் 4 அன்று வெளியான சுயம்புலிங்கம் பாலகணேஷ் எழுதிய ‘அண்ணாச்சி கடைகளும் அமெரிக்க வால்மார்ட்டும்’ என்ற கட்டுரையில் பொருளாதார பிரிவில் சிறந்த கட்டுரையாக பரிசு வழங்கப் பட்டது.  கோ.ஒளிவண்ணன், கே.செல்வக்குமார் ஆகியோரும் சிறந்த கட்டுரைக்கான பரிசு பெற்றனர். இவ்விழாவில் நக்கீரன் கோபால், வழக்கறிஞர் சவுந்தரபாண்டியன், எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கர்னல் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.

;