சென்னை,மே 29-நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் வசந்த குமார், ஏற்கெனவே வகித்து வந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் புதனன்று சபாநாய கரை சந்தித்து வசந்தகுமார் தனதுராஜினாமா கடிதத்தை அளித் தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குவதா அல்லது காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை நிறுத்துமாஎன்பது குறித்து இரண்டு கட்சி களின் மேல்மட்ட தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.