ஜனவரி மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து கடந்த ஆண்டில் மே மாதம் முதல் பிடித்தம் செய்யப்பட்ட வங்கி கடன், எல்.ஐ.சி. பிரிமியம் மற்றும் கூட்டுறவு தவணைகளை உடனே அந்த அந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும், மத்திய அமைச்சரவை கொடுத்த உறுதி மொழியான 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 10 மாதமாக வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள சம்பளத்தினை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் அனைத்திந்திய தொலைத் தொடர்பு கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கன்னியப்பன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. இதில் சார்லஸ், பத்ரிநாராய ணன், காசி, அண்ணாமலை, கங்காதரன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.