திருச்சிராப்பள்ளி, மே 27-தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்த பயனும்இல்லை என்பது தவறான பிரச்சாரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) மத்திய சங்க செயற்குழு கூட்டம் திருச்சியில் திங்க ளன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல்தலைவர் வி.ஜானகிராமன் தலைமை வகித்தார். தலைவர் சுகுமாறன், பொதுச்செயலாளர் மேத்யூ சிரியக், துணைத்தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் பேசினர். டி.கே.ரங்கராஜன் எம்.பி. சிறப்புரையாற்றி னார். நடைபெற உள்ள ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் குறித்து விவாதம் நடைபெற்றது. மத்திய சங்க கோட்ட, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக திருச்சி கோட்ட செய லாளர் கண்ணன் வரவேற்றார். திருச்சி கோட்ட தலைவர் மொய்தீன் நன்றி கூறினார்.
பின்னர் டி.கே.ரங்கராஜன் அளித்தபேட்டியில் கூறியதாவது:தட்சிண ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன் (டிஆர்இயு) மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. இந்த யூனியனின் போராட்டத்தாலேயே முதல் சம்பளக் கமிஷன் போடப் பட்டது. தென்னகத்தில் மட்டும் டிஆர்இயுவினர் 40 ஆயிரம் பேர் உள்ளனர். ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலின் முடிவு என்பது எதிர்பார்க்காதது. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் தான் அதிகம். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, தொழிற்சா லைகள் மூடல், இளைஞர்கள் வேலையிழப்பு. இதுதான் இந்தியா முழுவதும் இருந்த நிலை. ஆனால் தீவிரவாதம், தேச பாதுபாப்பு, பாகி ஸ்தான் அச்சுறுத்தல் போன்றவற்றை முன்வைத்து பாஜகவினர் தேர்தலை சந்தித்தனர்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கடந்த இரண்டரை ஆண்டுகளாக திமுக தலைமையில் மக்களுடைய பிரச்சனைகளை எடுத்துப் போராடியதன் காரணமாக ஒற்றுமையை ஏற்படுத்தியது. இதன் மூலம் 38 தொகுதிகளிலும் வெற்றி பெறமுடிந்தது. தேர்தலில் இடதுசாரி களுக்கு கடந்த காலங்களிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ரீதியாக இடதுசாரிகள் வெற்றி பெற வில்லையே தவிர இயக்க ரீதியாக இடதுசாரிகளை ஒதுக்க முடியாது என்பது தான் உண்மை. தேர்தலில் வரும் வெற்றி தோல்வி என்பதை இயக்கத்தின் மூலமாக ஈடுகட்ட முடியும். கோதாவரி- காவேரி இணைப்பு என்று இப்போது நிதின் கட்காரி கூறுகிறார். இது அறிவியல்பூர்வ மான அறிவிப்பா அல்லது அரசியல் பூர்வமான அறிவிப்பா என்பதை நாம் பார்க்க வேண்டும். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும். டெல்டாவில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்காகத் தான் என்பதை பிரதமர் மோடியிடம் எடுத்துக் கூறினோம். அதை அசட்டையாக பார்த்தாரே தவிர ஆக்கப்பூர்வமாக பார்க்கவில்லை. காவிரி பிரச்சனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி அனைவரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுவோம். தமிழகத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்த பயனும் இல்லை என்பது தவறான பிரச்சாரம். இவர்களால் எதுவும் கிடைக்கவிடாமல் செய்பவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். இது தமிழக மக்களை பழிவாங்கத் தான் உதவுமே தவிர தமிழக மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவாது. இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார். பேட்டி யின் போது டிஆர்இயு உதவி பொதுச் செயலாளர் மாதவன் உடனிருந்தார்.