tamilnadu

img

பெண்ணை தாக்கிய தீட்சிதர்

சிதம்பரம் கோயிலில் அராஜகம் 

சிதம்பரம்,நவ.17- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூசை செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ. உ. சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி மனைவி லதா ( 51). இவர் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள ஆயங்குடி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முதன்மைச் செவிலியராக பணி யில் உள்ளார். இவரது மகன் ராஜேஷ்(21) பிறந்த நாளான சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தி லுள்ள முக்குருணி விநாயகர் கோயிலுக்கு வந்துள்ளார்.  அப்போது கோவிலில் இருந்த தீட்சிதர் தர்ஷனிடம் மகனுக்கு பிறந்தநாள் எனக்கூறி பூசை பொருட்களை கொடுத்துள்ளார். அப்போது, தீட்சிதர் ஆபாசமாக பேசியுள்ளார்.  இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண்மணியை கன்னத்தில் அறைந்து நெட்டித் தள்ளி யுள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண்ணை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றியுள்ளர்.

அந்த இடத்தில் இருந்த தீட்சிதர் தகாத வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். இது அங்கிருந்த அனைவரையும் முகம்சுளிக்க வைத்துள்ளது. பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் சிதம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  புகார் அளித்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து ள்னர். இது குறித்து சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகே சன் மற்றும் காவல்துறையினர் கோயிலுக்கு வந்து விசாரணை செய்தனர். பிறகு, சம்பந்தபட்ட தீட்சிதர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்  பதிவு செய்து தேடிவருகிறார்கள். காவல்துறையினர் தேடுவதை அறிந்த தீட்சிதர் தர்சன் தலைமறைவாக உள்ளார். அவரது தந்தையை காவல்நிலை யத்திற்கு அழைத்து வந்து விசா ரணை செய்து வருகிறார்கள்.