tamilnadu

img

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இந்நிலையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்ட மருத்துவமனை டீன் குமுதா லிங்கராஜ் , நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இவர்களுக்கென தனி வார்டு அமைத்து, கஞ்சி , வடிகட்டிய வெந்நீர், நிலவேம்பு கசாயம் வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். மேலும் காய்ச்சலுடன் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்த 28 பேரில், 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

;