tamilnadu

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி விவகாரம்: திமுக கோரிக்கையை நிராகரித்த அதிமுக

சென்னை, மார்ச் 16- குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய  மக்கள் தொகை பதிவேடு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட் டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவரின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக கடந்த 14  ஆம் தேதி அரசின் தலைமைச் செயலா ளர் தலைமையில் தலைமைச் செயல கத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடை பெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பேசப் பட்டது என்ன? தலைமைச் செயலாளர் கொடுத்த விளக்கம் என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும்” என்றார். இஸ்லாமிய மக்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களிடமும் இந்த சட்டம்  பற்றி பயம் இருக்கிறது. எனவே அனைத்துக் கட்சிகளையும் அழைத்து  ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண் டும். அதில் இந்த பிரச்சனை குறித்து முழுமையாக விவாதித்தால் நன்றாக இருக்கும். எனவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஸ்டா லின் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு விளக்கம் அளித்த வரு வாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர் பாக பல்வேறு விளக்கங்களை கூறி யிருக்கிறோம். மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறோம்” என்றார். தலைமைச் செயலாளர் தலைமை யில் நடந்த கூட்டத்தில் 49 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதி வேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட 3 பிரச்சனைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மாநில அரசு  தனது சந்தேகம் குறித்து மத்திய அரசி டம் விளக்கம் கேட்டுள்ளது. சட்ட மன்றத்திலும் பலமுறை விவாதித்துள் ளோம். இதனால் சிறுபான்மையினர் எந்த விதத்திலும் பயப்பட வேண்டாம் என்று முதல்வர் கூறியுள்ளார். இது குறித்தும் இஸ்லாமிய பிரநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது  என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த 12 ஆம் தேதி மக்களவை யில் கபில்சிபல் எழுப்பிய வினாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா தெளி வாக விளக்கம் அளித்துள்ளார். மக்கள்  தொகை பதிவேட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆதாரம் எதுவும் அளிக்க வேண்டாம். தெரிந்த கேள்வி களுக்கு பதில் அளித்தால் போதும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ஆவணம் எதுவும் தேவையில்லை. தக வல் அளிப்பது அவரவர் விருப்பம். சந்தேகத்துக்குரிய குறியீடு எதுவும்  இடம்பெறாது என்பதையும் தெளிவுப் படுத்திவிட்டார். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. பயப்பட தேவை யில்லை என்று மத்திய அரசும் கூறி  விட்டது. சட்டப்பேரவையிலும் பல முறை விவாதித்து விட்டோம். எனவே  அனைத்துக் கட்சி கூட்டம் தேவை யில்லை எனவும் அமைச்சர் உதய குமார் தெரிவித்தார்.