tamilnadu

img

தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை, ஏப்.6- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கை கள் குறித்தும் மத்திய உள்துறை, மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கினால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் கண்காணிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அந்தக் குழுவின் ஆலோசனை கூட்டம்  நடைபெற்ற நிலையில்,  மத்திய உள்துறை செயலாளர்,  சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருடன் தலைமைச் செயலாளர்  ஆலொசனை நடத்தினார்.  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை, மருத்துவ மனைகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

;