tamilnadu

img

மாமூல் வாங்கும் காவல்துறையினர் மீது நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

சென்னை,ஆக.6- மாமூல் வசூலிக்கும் காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்ப டும் என டி.ஜி.பி.சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளார். சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வா ளர் ராமசாமி தொடுத்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதி பதி எஸ்.எம்.சுப்பிரமணி யம் தமிழகத்தில் காவல் துறையினர் பொது இடங்க ளில் மாமூல் வசூலிப்பது அனைவரும் அறிந்தது தான்  என்றும் தேசிய நெடுஞ் சாலைகள், காவல் நிலை யங்கள், வணிக மையங்கள்,  கடைகளில் மாமூல் வசூ லிக்கின்றனர் என்றும் தெரி வித்தார்.

 மேலும் உணவு விடுதி கள், காய்கறி சந்தை, இறைச்சி கடைகளில் இலவச மாக பொருட்கள் வாங்கு கின்றனர் எனவும் தெரிவித்த  அவர், இதை பொதுமக்களே நேரில் பார்க்கிறார்கள் என் றும் இது அரசு பொது ஊழி யர் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தை மீறுவது மட்டும்  இல்லாமல் சட்டப்படி குற்ற மாகும் என்றும் தெரி வித்தார். காவல்துறையினர் மாமூல் வசூலிப்பது காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்ப டுத்துகிறது என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உள்துறை  செயலாளர், டி.ஜி.பி. ஆகி யோர் 4 வாரத்தில் உரிய உத்த ரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இது தொடர்பாக சுற்ற றிக்கை அனுப்பியுள்ள டிஜிபி  திரிபாதி, பொதுமக்கள் கூடும்  இடங்கள் சந்தைப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் பணமோ அல்லது பொருட்களாகவோ மாமூல் என்கிற பெயரில் பெறுவதாகவும் இதுவும் ஒரு வகை லஞ்சம் என்பதால்  ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் அவர் எச்சரித்துள்ளார்.