tamilnadu

img

14 வயது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்... சென்னை அயனாவரம் போல் இன்னொரு சம்பவம்...

தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகேயுள்ள திருவாளப்புத்தூரில் துப்புரவு தொழிலாளியின் 14 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பலரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கர்ப்பமடைந்த அச்சிறுமிக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்துள்ளது.ரஜினி மன்ற நிர்வாகி, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில காவலர்கள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் என பலரும் இக்கொடூரத்தை அரங்கேற்றிய நிலையில் காவல்துறையினரும் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை முறையாக விசா
ரிக்க காவல்துறை தயங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மணல்மேடு அருகேயுள்ள வரதம்பட்டு ஊராட்சி திருவாளப்புத்தூர் பகுதியில் வசித்து வந்த துப்புரவு தொழிலாளி ஒருவரின் கடைசி மகள்தான் காமக்கொடூர கும்பலால் சீரழிக்கப்பட்டு ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார். மணல்மேடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களாக இருந்த அச்சிறுமியின் பெற்றோர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள வரதம்பட்டு ஊராட்சி யில் வேலை செய்ய வந்துள்ளனர்.றுமியின் தந்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தாயும், சிறுமியும் வீடு இல்லாததால் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே உள்ள மின்மோட்டார் அறையிலேயே வசித்து வந்துள்ளனர்.

சிறுமியை சீரழித்த ரஜினி மன்ற நிர்வாகி
அருகேயுள்ள திருவாளப்புத்தூரில் அடகுகடை வைத்துள்ள மயிலாடுதுறை ஒன்றிய ரஜினி மக்கள் மன்றஇணைச் செயலாளர் செந்தில்குமாருக்கு சொந்தமான குடியிருப்புகளில் சுத்தம் செய்யும் வேலையை சிறுமியின் தாயார் மாரியம்மாள் செய்துவந்துள்ளார். அவர் வராத நாட்களில்சிறுமி சென்று சுத்தம் செய்வது வழக் கமாக இருந்த நிலையில், சிறுமியை மிரட்டி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளார் செந்தில்குமார்.இதில், அவனது நண்பர்கள், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள், முன்னாள்ஊராட்சி தலைவர் என பலரையும் கொண்டு சிறுமியை சீரழிக்க வைத்துள்ளான். சிறுமியின் தாயார் குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை பயன்படுத்திக் கொண்ட அதேப் பகுதியை சேர்ந்த தொப்பையன் என்கிற முதியவர் ராதாகிருஷ்ணன், கடலங்குடியைச் சேர்ந்த ராஜ் ஆகியோரும் சிறுமியை தொடர்ந்து வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனிடையே கர்ப்பமடைந்த சிறுமிக்கு கடந்த ஜூலை 22 அன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சிறுமியின் அக்கா கணவருக்கு, இரண்டாம் தாரமாக திருமணம் செய்துக் கொடுத்துள்ளதாகவும் அதில் கர்ப்பமாகி குழந்தை பிறந்ததுஎன சிறுமியின் தாயார் கூறியதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய சமூகப் பணியாளர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் அக்கா கணவரான வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த தினேஷ் என்பவரை கைது செய்து, சிறுமியின் தாயார் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.சம்பவம் குறித்து அறிந்த மார்க் சிஸ்ட் கட்சியினர் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, போஸ்டர்கள் அடித்து ஒட்டியதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் ரஜினி மன்ற நிர்வாகி செந்தில்குமார், முதியவர் ராதாகிருஷ்ணன், ராஜ் ஆகியோரை கைதுசெய்தனர்.மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கடும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்குமாரை உரிய முறையில் விசாரித்தால் இன்னும் பலர்சிக்குவர் என்றும், காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. உடனடியாக இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டுமென மார்க் சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் சி.மேகநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள சிறுமியை சில நபர்கள் எதையும் சொல்லிவிடக் கூடாதென மிரட்டி வருவதாக கூறப் படுகிறது. சிறுமிக்கும் குழந்தைக்கும் உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும். மேலும் குற்றவாளியான செந்தில்குமார் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு பிரித்திவிராஜ் என்ற வழக்கறிஞருடனான உரையாடலில், இச்சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தவர்களை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டும் வகையில் பேசியது குறித்துகாவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதை கண்டித்து ஓரிரு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். மணல்மேடு காவல்நிலையத்திற்கு புதிதாக வரும் காவல்ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமாருடைய குடியிருப்புகளில் தங்குவது தொடர்ந்து வழக்கமாக உள்ளது. அதைப் பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்து செய்வது, மணல் கொள்ளையர் களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற செயலில் ஈடுபடும் செந்தில்குமார் சிறுமியை தனக்கு வேண்டியவர்களின் இச்சைக்கும் பயன்படுத்தியுள்ளான்.அதேபோன்று ஏழ்மை நிலையிலுள்ள பல பெண்களிடமும் தவறான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவதை வாடிக்கையாக வைத் துள்ளான் என அப்பகுதியினர் கூறுகின்றனர். மயிலாடுதுறை மாவட் டத்தையே உலுக்கியுள்ள இச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்குமா? 14 வயது சிறுமியை மிரட்டி வன் கொடுமை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யுமா?
 

;