tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் இந்தியர்கள் தாயகம்  திரும்பியுள்ளதாக மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.

நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் தில்லி முழுவதும் காவல் துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 12 நகரங் களில் இருந்து 109 வழித்தடங் களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. தனியார் ரயில்களை இயக்க ஸ்டெர்லைட் பவர் உள்பட 23 நிறுவனங்கள் ஆர்வம் தெரி வித்துள்ளன.

பொறியியல் படிப்பில் சேர்வ தற்கான விண்ணப்பங் கள் பதிவு எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஏ.கே.47 ரக துப்பாக்கி குண்டுகள் உள்ளே புகாத வகையில் ஆவடி  தொழிற்சாலையில் வடிவமைக்கப் பட்ட குண்டு துளைக்காத சட்டை தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமானநிலையத்தில் வாகனச்சோதனை  நடத்தப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக் காக 2022 ஆம் ஆண்டு வரை டோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரி வித்துள்ளார்.

குடும்பச் சொத்தில் பெண் களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த  தீர்ப்பை தடையின்றி நடைமுறைப் படுத்த வேண்டும் என, திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.