தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை என்று டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வேகமாக கோவிட்-19 தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. 367 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னையில், 28,924 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 290 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை தற்போது நடத்த வாய்ப்பில்லை என்று டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் கூறுகையில், ”தமிழகத்தில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை. இந்த நிலை சரியான பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்படும். குறிப்பாக, குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே போதிய கால அவகாசம் வழங்கப்படும். அதே போல், தேர்வுகளுக்கு முன்பு, 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.