tamilnadu

img

தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்துள்ளது....

சென்னை:
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகம் பெய்துள்ளது. கடந்த  ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை செப்டம்பர் 30 ஆம்தேதியுடன் முடிவடைந்தது. இப்பருவ மழை  காலத்தில் 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.  இயல்பான  மழை அளவு 34 செ.மீ. ஆகும்.  அதைவிட8 செ.மீ. அதிகம் பெய்துள்ளது.

சென்னையில் வழக்கத்தைவிட ஒரு சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. பொதுவாக தென் மேற்கு பருவமழை 44 செ.மீ. கிடைக்க வேண்டும். அதைவிட அதிகமாக பொழிந்துள்ளது.இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளதால்சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு,  கிருஷ்ணகிரி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின. மேட்டூர்,  பவானிசாகர், பாபநாசம், பேச்சிபாறை, பெருஞ்சாணி ஆகிய அணை களில் கணிசமான நீர் இருப்பு உள்ளது. இப்பருவ மழை காலத்தில்காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.தென்மேற்கு பருவ மழையால் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் நடத்திய ஆய்வில் தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.