tamilnadu

img

கட்டுப்பாடும் இல்லை கட்டுப்படுத்தவும் இல்லை

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவிவரும் வைரஸ் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. அதாவது பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக் கிறது.  தமிழக சுகாதாரத் துறை வெளி யிட்டிருக்கும் பட்டியலில் சென்னை முதல் இடத்திலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களும் பிடித்திருக்கின்றன.

வைரஸ் தொற்று பரவலை கட்டுப்ப டுத்த முதலமைச்சரின் உத்தரவுகள் எப்படி அமலாக்கப்பட்டு வருகிறது என்பதை களத்தில் இறங்கி ஆய்வு செய்யும்  மாவட்ட ஆட்சியர்கள் பலரும் தங்களுக்கு  வழங்கப்பட்ட அதிகாரத்தை கொண்டு கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கி பிடித்த னர். பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவையும் கடைப்பிடித்தனர். விளைவு, கோவை, ஈரோடு, சேலம், நாமக்  கல் மாவட்டங்கள் வைரஸ் தொற்றின் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தன.

அதேசமயம்,அரசுத் துறைகளின் அனைத்து தலைமை அலுவலகங்களும் சென்னையில் இருப்பதோடு முதலமைச் சர், சுகாதாரத்துறை அமைச்சர், தலை மைச் செயலாளர், சுகாதாரத்துறை செய லாளர், இயக்குநர், சிறப்பு அதிகாரி என வரிசைகட்டி நின்றும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது ‘தலைநகர்’.

இங்கு மட்டும் ஏன் இந்த நிலை?

சென்னை மாவட்டம் முழுக்க முழுக்க  நகரவாசிகளும், புலம்பெயர்ந்த கிராம வாசிகளும் வசிக்கும் பகுதியாகும். குறுக லான தெருக்கள், மக்கள் தொகை நெருக் கம் மிகுந்த மாநகராட்சி என்பதால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று அறிகுறி குறித்து வீடு வீடாகச் கணக்கெடுப்பு நடத்த தினசரி 500 ரூபாய்  என்ற அடிப்படையில் தற்காலிக பணியா ளர்களை நியமித்தது மாநகராட்சி நிர்வாகம்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில்  ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தும் பணியாளர்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி, பாதுகாப்பு உடை கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வருகிறது. இந்த பணியாளர்களின் பரிதாப  நிலையை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சிலர் தாமாகவே முன்வந்து பாதுகாப்பு உடைகளை வழங்கினர். பல்வேறு சிரமங்  களுக்கிடையே கணக்கெடுக்கும் இவர்க ளால் நீரழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு தவிர  வைரஸ் தொற்று பாதித்த ஒருவரைக் கூட அடையாளம் காண முடியவில்லை.

இதற்கு காரணம், 600க்கும் அதிகமான  பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக அறி விக்கப்பட்டுள்ளன.  வைரஸ் தொற்று அறி குறி தெரிந்தாலே தனிமைப்படுத்தும் நடவ டிக்கைகளால் மக்களிடம் ஏற்பட்ட அச் சத்தின் வெளிப்பாடே இது. சென்னை மாநகரில் வைரஸ் பரவல் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர சிறப்பு  அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை யில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று வரும் சிறப்பு அதிகாரி, வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல சிறப்புக்குழு அலுவ லர்களுடன் ரிப்பன் மாளிகையில் ஆலோ சனைக் கூட்டத்தையும் நடத்தினார். எந்த நிகழ்விலும் சென்னை மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், சென்னை யில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருக்கிறது. அடுத்த  ஆறு நாட்கள் வைரஸ் தொற்று அதிக ரிக்கும். வீடு வீடாக பரிசோதனை நடத்து வது அவசியம் என்கிறார் சிறப்பு அதிகாரி.  ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில், தனிக் கடைகள், வீட்டு உபயோக விற்பனை கடை களை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர், மெல்ல மெல்ல ஊரடங்கை தளர்த்தி சலூன், நகை, துணி  கடைகளை தவிர  அனைத்து கடை வாசலில் திறந்துவிட்ட  முதல்வர், வைரஸ் தொற்று கட்டுக்கடங்கா மல் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சி யர்கள் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.

சுகாதாரத் துறையின் இயக்குனர், செய லாளர், அமைச்சர் என ஒட்டுமொத்த அரசு  எந்திரம் செயலிழந்து நிற்பதை உணர முடி கிறது. ஒருங்கிணைப்பு இல்லாமல் ஈகோ” வால் உள்குத்து வேலைகள் நடப்பதே இதற்கு காரணம் என்றும் சுகாதாரத் துறை  வட்டாரங்கள் கூறுகின்றன. துவக்கத்தில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், பின்னர் துறை செயலாளர் பீலா ராஜேஷ், பின்னர் தலைமைச் செயலாளர் சண்முகம், மீண்டும் பீலாராஜேஷ், நடுவில்  ஒரு நாள் விஜயபாஸ்கர், பின்  நேரடியாக  முதலமைச்சர் என கடந்த 45 நாட்களில் ஒருவர் மாற்றி ஒருவர் (மழை, வெள்ளம், வறட்சி, இயற்கை இடர்பாடுகளின் போது குத்துமதிப்பாக அளிக்கும் கணக்கை போன்று) ஒரு புள்ளி விவரங்களை அளித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை மாநகர ஆணையர் பிரகாஷ் மட்டுமே  ஊடகங்களில் தலை காட்டுகிறார். அவ ரும், சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன்  கொடுக்கும் அறிக்கையை செவிமடுப்ப தாக தெரியவில்லை. அரசின் செயல்பாடு கள் அனைத்தும் ‘கை நழுவி’ போனதன் பின்னணியை மூடி மறைக்கவே சென்னை  மாநகரத்தில் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்புவதாக மகிழ்ச்சி அடையும் அரசு ஏழை  மக்கள் உயிரைப் பற்றி கிஞ்சிற்றும் கவலை படவில்லை.

400 சதுர அடிக்கு இரண்டு குடும்பங் கள் வசிக்க வேண்டிய பகுதியில் ஆறுக்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சூழ்நிலை  உள்ளது. இதனால் வைரஸ் பரவலை கண்டுபிடிப்பதில் சிரமம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று இன்றோ, நாளையோ முடிந்துவிடும் என்று  யாராலும் உறுதிபட கூற முடியாது.  அவ்வப்போது தலையெடுத்துக் கொண்டே இருக்கும். இனி காய்ச்சல், இரு மல், சளி அதிகமானால் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா  என்பதை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மக்கள் அச்சமின்றி வாழ சுகாதாரத்  துறையில் காலியாக உள்ள செவிலியர்,  கிராமப்புற செவிலியர், சுகாதார ஆய்வா ளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களை யும் நிரப்பி நிரந்தரமாக்க வேண்டும். பல்நோக்கு பயிற்சி முடித்தவர்களில் 2,000  மக்கள் தொகைக்கு ஆண், பெண் என இரு வரை களப் பணியில் ஈடுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

கொரோனா வைரஸ் பரவல் அதிக ரித்து வரும் இந்த சூழ்நிலையில் டெங்கு  காய்ச்சலும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அடுத்த மூன்று மாதங்கள் வைரஸ்  களின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து மக்கள் முடக்கப்படுவது நீண்ட சோகமாக இருக்க வாய்ப்புள்ளது. “திருவாசல் ஆண்டி ஒரு வேலைக்கும் உதவான்” என்ப தைப்போல அரசின் செயல் இன்மையால்  மாநிலம் முழுவதும் இருக்கும் நிலையைக்  காட்டிலும் தலைநகர மக்கள் பெரும் துயரத்தை சந்திக்கிறார்கள். மக்கள் சுயமாகவே தங்களை பாது காத்துக் கொள்ளவேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் அரசு தன் இயலாமையை மறைக்க குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது.

-சி.ஸ்ரீராமுலு