tamilnadu

img

எல்டிஎப் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்

ஏசியாநெட் நியூஸ்- சீ போர் கருத்துக்கணிப்பு

திருவனந்தபுரம், ஜுலை 6- கேரளத்தில் இப்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியை தொடரும் வாய்ப்பு எல்டிஎப்-க்கு கிடைக்கும் என ஏசியா நெட் நியூஸ்- சீ போர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 140 இடங்களில் 77 முதல் 83 இடங்களை எல்டிஎப் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. யுடிஎப்-க்கு 54 முதல் 60 இடங்கள் கிடைக்கும். என்டிஏ 3 முதல் 7 இடங்களைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் எல்டிஎப்-க்கு 91 இடங்கள் கிடைத்தன. பெற்ற ஓட்டு 43.48 சதவிகிதம். யுடிஎப் 47 இடங்களைப் பிடித்தது. ஓட்டு சதவிகிதம் 38.81. என்டிஏ-க்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. பெற்ற ஓட்டு 14.96 சதவிகிதம்.

முதல்வராக பினராயிக்கு ஆதரவு

யார் முதல்வராக வேண்டும் என்கிற கேள்விக்கு பினராயி விஜயனே தொடர வேண்டும் என அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர். 27 சதவிகிதம் ஆதர வுடன் அவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி 23 சதவிகிதம் ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.  சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா 12 சதவிகிதம் ஆதரவுடன் முதல்வருக்கான பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். பாஜக தலை வர் கே.சுரேந்திரன் முதல்வராக 7 சதவிகி தம் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.