முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். அப்படியான பதிலைத்தான் குருசரண் தாஸ் எழுதி தி இந்து தமிழ் திசை நாளிதழில் (2019 செப் 30) தமிழாக்கம் செய்யப்பட்டு வெளி யாகியுள்ள “முதலாளித்துவத்தின் எதிர்காலம்” என்ற கட்டுரைக்கு சொல்ல வேண்டியுள்ளது. குருசரண் தாஸ் எழுதிய நூல்களை தேடியபோது இரண்டு நூல்கள் கண்ணில் பட்டது. ஒன்று 1990 களில் இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை களை அமல்படுத்தியதை ஆதரித்துப் பேசும் புத்தகம் என்று குறிப்பிடப்பட்டுள்ள “ The elephant paradigm“ எனும் புத்தகம். மற்றொன்று “The difficulty of being good” என்ற அவருடைய புத்தகத்தின் தமிழ் வடிவ மான “மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை”. பிறகுதான் விளங்கியது இது சங்கியும் முத லாளித்துவமும் கலந்த படைப்பு என்று. அந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே “மேற் கிந்திய நாடுகளில் உள்ள இளைஞர்கள் முதலா ளித்துவ சந்தைக்கு எதிராக திரும்பி வருகின்றனர்” என்று வருந்துகிறார். முதலாளித்துவம் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்களின் 180 தலைமைச் செயல் அதிகாரிகள் இணைந்து சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர் என்றும், அந்த அறிக்கை நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் மில்ட்டன் ஃபிரைடுமேன் கடந்த 1970-ம் ஆண்டில் கூறிய, ‘‘நிறுவனத்துக்கு லாபமும் பங்குதாரர்களின் நலனும்தான் முக்கியம்’’ என்ற கொள்கைக்கு முரணாக உள்ளது என்று ஆதங்கப்படுகிறார். முதலாளித்துவத்தின் அடிப்படையான லாபத்தை யும், அதன் பங்குதாரர்களின் நலனையும் விட்டுவிட்டு அந்த அறிக்கை ‘நிறுவனத்தின் லாபம் மட்டுமே குறிக் கோளாக இல்லாமல், வாடிக்கையாளர்கள், ஊழி யர்கள், சப்ளையர்கள், சமூக நலன், சுற்றுச்சூழல் மற்றும் சமூக மாற்றத்தை குறிக்கோளாகக் கொண்டி ருக்க வேண்டும்’ என்கிறதாம். அய்யகோ, இது எப்படி நியாயம் என்று அங்கலாய்க்கிறார்.
ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றவுடன், தங்கள் நாட்டு தொழிலாளிகளும் எழுச்சியுற்று தங்களின் சுரண்டலுக்கு மொத்தமாக முடிவுகட்டி விடுவார்களோ என்று அஞ்சி முதலாளித்துவ நாடுகள் வேலை தளத்தில் சில மாற்றங்களை செய்தன. அரசு சார்பில் சில சேம நல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியே கீன்சிய பொருளாதாரம் என்று அறியப் படும் கீன்சின் சேமநல பொருளாதாரக் கொள்கை. தோழர் இ.எம்.எஸ் சொல்வது போல், ‘’முதலா ளித்துவம் தனது கொள்கையை சரியாக அமல்படுத்தி னால் அது சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அப்படி அது தனது லாப வேட்கையால் தொழிலாளியின் கூலியில் இருந்து சுரண்டி அவர்களை வாங்கும் சக்தியில்லாமல் ஆக்கிவிட்டது. பிறகு முதலாளித்துவம் உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ள பொருட்களை அவர்கள் எதைக் கொண்டு வாங்குவார்கள்? இப்படி யான பொருளாதார நெருக்கடி இன்று பலரிடம் முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. ரஷ்யா வீழ்ந்தபோது முதலாளித்து வமே மாற்று என்று கூப்பாடு போட்டவர்கள் இன்று சிக்கலில் உள்ளனர். முதலாளித்துவமே சிக்கலின் வடிவம் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் படுகிறது.’’ முதலாளித்துவத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருகின்றனர். இதை அவர்களின் ஆய்வின் மூலமாகவே கண்டறிந்து, சில மேம் போக்கான கதைகளைத்தான் மேற்படி 180 நிறுவனங்களின் செயல் அதிகாரிகளது. அறிக்கை பேசியது. அந்தக் கதையையே இவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் கதறியிருக்கிறார்.
அமெரிக்க நிறுவனங்களின் “லாபத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படாத தலைமைச் செயல் அதிகாரி களின் இந்த அறிக்கையால், இந்தியாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு தாங்கள் செய்யும் வேலையின் மீது மரியாதை இல்லாமல் போய்விடும் என நான் அஞ்சுகிறேன்” என்கிறார். அடடா என்ன ஒரு ஆதங்கம். என்னே ஒரு பித்தலாட்டம். முதலாளிகளின் லாபம் என்பதே தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து சுரண்டப் படுவதுதான் என்று மிக விரிவாக மார்க்ஸ் தெளிவு படுத்திய பிறகும் இவர்களின் பம்மாத்து அறியா மையா? அல்லது ஏமாற்றுவேலையா? லாபம்தான் தொழிலாளியின் கூலியை குறைத்துக் கொடுக்கச் செய்கிறது. உண்மையில் லாபம் என்பது முதன்மை இல்லையெனில் தொழிலாளர்களின் கூலி அதிகரிக்க வேண்டும். அதுவே தொழிலாளர்களின் செயல் திறனை உயர்த்தும். லாபத்தை முதன்மைப்படுத்தா மல் முதலாளி வர்க்கத்தால் செயல்படமுடியாது. ஆனால் அப்படி வெறும் வார்த்தைகளில் சொல்வதே கூட இவரை அஞ்சவைக்கிறதாம்.! “நிறுவனங்கள் எப்படி லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்பதையும், எப்படி அவை செலுத்தும் வரிகள் மூலம் அரசுகள் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நடத்து கின்றன என்பதை மறந்து போகிறார்கள்” என்கிறார்.
உண்மையில் மக்களின் வரிப் பணத்தில்தான் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நடக்கின்றன. ஆண்டுக்கு ஐந்து லட்சம் கோடிக்கு மேல் வரி விலக்கு இந்த பெரு நிறுவனங்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. தொழில் தொடங்க ஏகப்பட்ட சலுகைகள் இவர்களுக்குத்தான் தரப்படுகிறது. இன்னும் சொல்வதென்றால் சேவைத் துறையாக இருந்த கல்வியையும், மருத்துவத்தையும் வணிகமாக்கியதே இந்த புதிய பொருளாதாரக் கொள்கைதான். இவ்வளவு சலுகைகள் பெருநிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆனாலும் அவர் சொல்லு கிறார்: “ஏழைகளுக்கு உதவுவது நிறுவனங்களின் சமூகக் கடமையாக இருக்கக் கூடாது. அது தனிநபரின் கடமையாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி, அதன் பங்குதாரர்களாக இருப்பவர்க ளின் நலனைப் பாதுகாப்பதன் மூலம் சமூகத்துக்கு நன்மை செய்கிறது. பிறருக்கு உதவுவது என்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும். இதுவே நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.” என்ன ஒரு கீழ்த்தர மான அருவருப்பான கொள்கை இவர்களுடையது. இதிலிருந்து இவர்கள் சொல்லவருவதென்ன, தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவோம் அதன் மூலம் கொள்ளை லாபம் அடைவோம். குறைந்த பட்சம் பெயரளவிற்கு கூட அதிலிருந்து சமூகத்திற்கு எதையும் கொடுக்கமாட்டோம் என்பதுதானே. ஏழைகள் ஏழைகளாக இருப்பதே இவர்களின் கொள்ளை லாபம் தானே? இந்த முதலாளித்துவ சுழற்சியில் தேக்கம் ஏற்படுவதும் இவர்கள் தொழிலா ளர்களுக்கு போதுமான கூலி கொடுக்காததும்தானே? பொதுத்துறையை சூறையாடுவதுதானே இவர்களின் தொழில் சிறப்பதற்கும் மக்களின் சொத்து கரை வதற்கும் காரணம். மொத்தத்தில் பெரு முதலாளிக ளின் லாபமும் மக்களின் வறுமையும் தான் இவர்களது விருப்பம். அந்த விருப்பத்தை ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியான அரசு மிகச்சிறப்பாக செய்கிறது.
மார்க்ஸ் தனது ‘லூயி போனபார்டின் பதி னெட்டாம் புருமையர்’ என்ற புத்தகத்தில் “நாடாளு மன்ற ஆட்சி முறை எல்லாவற்றையும் பெரும் பான்மையோர் முடிவுக்கு விட்டு விடுகிறது. அப்படி யானால் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் மாபெரும் பெரும்பான்மையினர் (தொழிலாளி வர்க்கம்) மட்டும் முடிவு செய்ய விரும்பாமலிருப்பார்க ளா?” என்று கேள்வி எழுப்புவார். தொழிலாளிகளைச் சுரண்டும், மக்களை வஞ்சிக்கும் இந்த முதலாளி வர்க்கத்தையும், இந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள அரசு களையும் எல்லா காலத்திலும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கான முடிவுகட்டும் வேலையை தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கிச் செய்யும். முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்க ளின் சார்பாகவும், ஆதரவோடும் முதலாளித்து வத்தை சிறப்பான முறையில் அடக்கம் செய்யும் வேலையை தொழிலாளி வர்க்கம் செய்து முடிக்கும்.