காப்பன் திரைப்பட பாடலில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளன.
சூர்யா மற்றும் கே.வி.ஆனந்த் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் காப்பான். சூர்யாவுடன், மோகன் லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
மோகன் லால் இந்திய பிரதமராகவும் அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் இடம் பெற்றுள்ள சிறுக்கி என்ற கிராமத்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், அழிந்துவரும் விவசாயம், தண்ணீர் தட்டுப்பாடு குறித்த வரிகளும், "ஒற்றுமையா பொங்கி எழுந்தா ஓடிவரும் காவிரி" போன்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.