tamilnadu

img

சுபஸ்ரீ பலியான வழக்கில் தேடப்பட்ட ஜெயகோபால் கைது

சென்னை பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் தேடப்பட்ட ஜெயகோபாலை போலீசார் கிருஷ்ணகிரியில் கைது செய்தனர்

சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் கவுண்சிலரான ஜெயகோபாலின் இல்லத் திருமண விழாவுக்காக பேனர் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 12-ஆம் பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவே தடுப்பின் மீது கட்டப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர் திடீரென சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில், பின்னால் வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில், சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனிடையே கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஒரு தனிப்படை கிருஷ்ணகிரி, ஒகேனக்கல் பகுதியில் தேடி வந்தது. இந்நிலையில் தற்போது தலைமறைவான ஜெயகோபாலை  கிருஷ்ணகிரியில் போலீசார் இன்று கைது செய்து உள்ளனர்.