tamilnadu

img

சில்லரைப் பிரச்சனையில் ஷீரடி கோவில்

ஷீரடி, ஜுன் 18- ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான சில்லரைகள் உண்டியலில் கொட்டப்படுவதால், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாமல் ஷீரடி சாய்பாபா ஆலய நிர்வாகம் திணறி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலானது நாட்டில் அதிக வருமானம் வரும் கோயில்களில் ஒன்றாக உள்ளது. கடந்த சில வாரங்களாகவே, ஒவ்வொரு முறையும் 14 லட்சம் ரூபாய் சில்லரையானது உண்டியலில் இருந்து கிடைப்பதாக ஆலய நிர்வாகம் தெரி வித்துள்ளது. வங்கிகள் இதனை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், இந்த சில்லரை களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக  அலுவலரான தீபக் முக்லிகர் என்டிடிவிக்குப்  பேட்டி அளித்துள்ளார். ஒவ்வொரு வாரமும்  இரண்டு முறை உண்டியலில் விழும் காணிக்கைகளை எண்ணுவது வழக்கம் என்றும், ஒவ்வொரு முறையும்  2 கோடிக்கும் குறையாமல்  பணம் கிடைக்கிறது என்றும், இந்த மொத்தப் பணத்தையும் பெற்றுக்கொள்ள வங்கிகள் மறுத்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தானி அறக்கட்டளைக்கு 8 வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இந்த 8 வங்கிகளும் சில்லரைகளை வைக்க இடமில்லை என்று தெரிவித்ததாக இந்த அறக்கட்டளை  கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, விரைவில் இந்திய ரிசர்வ் வங்கியைத் தொடர்பு கொள்ளவிருப்பதாக முக்லிகர் தெரி வித்துள்ளார்.