சென்னை, ஜூலை 29 - 2018ம் ஆண்டிற்கான தமுஎகச திரை விருது ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பரி யேறும் பெருமாள்’, ‘காலா’ ஆகிய படங்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 2018ல் வெளியான சிறந்த திரைப் படங்களுக் கான விருது வழங்கும் விழா (ஜூலை 27) சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படத்திற்கான விருதை கதாசிரி யரும், இயக்குநருமான லெனின்பாரதி யும், ‘பரியேறும் பெருமாள்’ படத்திற் கான விருதை கதையாசிரியரும், இயக்குநருமான மாரி செல்வராஜூம் பெற்றுக் கொண்டனர். ‘காலா’ படத் திற்கான விருதை கதாசிரியர், இயக்கு நர் பா.ரஞ்சித் சார்பில் இணை இயக்குநர் ஜென்னி, வசனகர்த்தாக்கள் ஆதவன் தீட்சண்யா, மகிழ்நன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர். இப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இயக்குநர்களின் பொற்காலம்
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய தமுஎகச துணைத்தலைவர் ரோகிணி, “மாரிசெல்வராஜ் போன்ற கலைஞர்கள் ‘வியாபாரத்தில்’ சிக்கிக் கொள்ளக் கூடாது. பெற்றோர் நிலையிலிருந்து தமுஎகச உங்களிடம் கேட்டுக் கொள்கிறது. பா.ரஞ்சித் உரு வாக்கியுள்ள நூலகம் உதவி இயக்கு நர்களுக்கான மிகப்பெரிய பங்களிப்பு. அதிலிருந்து நல்லஇயக்குநர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். இயக்குநர்களுக்கான பொற்காலம் என்று இக்காலத்தை சொல்லலாம்” என்று கூறினார்.
மனிதஉரிமை மீறல்
ஏற்புரையாற்றிய இயக்குநர் லெனின் பாரதி, “அண்மையில் பச்சை யப்பன் கல்லூரி மாணவர்களில் சிலர் சாலையில் சிலரை வெட்டுகிற சம்பவம் நிகழ்ந்தது. இதில் கைது செய்யப் பட்டவர்கள் ஒரேமாதிரி கழிவறையில் ‘வழுக்கி விழுந்து’ கைகள் உடைந் திருக்கிறது. இதுமோசமான மனித உரிமை மீறல். நீதிமன்றம், சிறை எல்லாம் எதற்கு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். “மாணவர்களின் வன்முறைக்கு சமூகம்தான் பொறுப்பு. சமமான வாய்ப்பு கிடைக்காததால் கத்தி தூக்க தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் சினிமாவில் பிடித்தமான கதாநாயகன் இருக்கிறார். அந்த கதாநாயகன் கத்தி யை தூக்கும்போது அதேபோன்ற எண்ணம் அவர்களை பின்பற்றுகிற வர்களுக்கும் எழுகிறது. எனவே, கத்தி ஏந்துகிற கதாநாயகர்களும், அதை இயக்கும் இயக்குநர்களும்தான் கழி வறையில் வழுக்கி விழ வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
பிற்போக்கு படங்கள் வெற்றிபெறாது
“பெரும்பான்மை மக்கள் சாதி பார்ப்பதில்லை. சிறுபான்மையான வர்கள்தான் சாதி பார்க்கிறார்கள். பெரும்பான்மையோர் அமைதியாக இருப்பதால் அவர்களோடு பேசவே பரி யேறும் பெருமாள் உருவானது” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். பிற்போக்குத்தனமான படங்கள் இனி அதிகம் வராது; வந்தாலும் வெற்றி பெறாது என்று நம்பிக்கை தெரிவித்த அவர், “விருது பெற்றுள்ள படங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும் போதெல்லாம் நினைவுகூரும் வகை யில் அமையும். பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் பெறுவதிலேயே பாதி காலம் முடிந்துவிடுகிறது. எனவே, சாதி ஒழிப்பை பற்றி பேச, விவாதிக்க வேண்டும்” என்றார்.
மனநோயிலிருந்து விடுதலை
நிறைவாக பேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சாதி ஒழிப்பதற்கான முன்னு தாரணம் ஏதும் இல்லாததால், படைப்பா ளிகள் தங்களுக்கு ஏதேனும் ஒரு வழி புலப்படுகிறதா என முயற்சிக்கிறார்கள். சாதி வெறியர்களை அந்த மன நோயிலிருந்து விடுபட்டு மனிதர்களாக மாற்ற தலித், ஒடுக்கப்பட்ட மக்கள் சினிமா வழியாக கருத்தியல் களப் போராட்டத்தை நடத்துகிறார்கள். சாதிக் கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு குரல் கொடுக்கிற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநாடு ஆகஸ்ட் 15-17 வரை தஞ்சையில் நடக்க உள்ளது. இதனை யொட்டி சாதி ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விவாதித்து வரு கிறது. சாதி ஒழிப்புக்கான பாரம்பரி யத்தை முன்னெடுத்துச் செல்வோம். இந்தியா போன்று பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் ஒரே கல்விக் கொள்கை என்பது தவறானது. தாய்மொழி வழிக்கல்வி யை மும்மொழிக் கொள்கை என்ற பெய ரால் மத்திய அரசு நிராகரிக்கிறது. இந்தக்கல்விக் கொள்கையை எதிர்த்து திருச்சியில் ஆகஸ்ட்23ந் தேதி கல்வி உரிமை மாநாடு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் அமைப்பின் மாநிலப் பொருளாளர் சு. ராமச்சந்திரன், மாநில நிர்வாகிகள் எஸ்.ஏ.பெருமாள், களப் பிரன், கி. அன்பரசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் சி.எம். குமார், செயலாளர் வெ. இரவீந்திரபாரதி, பொருளாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.