சென்னை,ஜூலை 22- சுவாதி கொலை வழக்கு அடிப் படையில் உருவான ‘நுங்கம்பாக் கம்’ படத்தை வெளியிட ஆட்சே பனை இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விஜயகாந்த் நடித்த ‘உளவுத் துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவ ரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜன னம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன். தற்போது ரவி தேவன் தயாரிப் பில் புது முகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கியிருக்கி றார். இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் அந்த திரைப்படத்தைப் பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கள் தலைவர் தொல். திருமாவள வன்,“இந்த படம் உண்மை சம்ப வத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிற ஒரு கலை படைப்பாகும். இது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடை யில், கடுமையான நெருக்கடி களுக்கு இடையில் தயாரிக்கப் பட்டிருக்கிறது” என்றார். சுவாதி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த திரைப் படம், ‘சுவாதி கொலை வழக்கு’ என்கிற பெயரில் வெளியிடுவ தற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில் நுங்கம்பாக்கம் என்கிற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளிவர அனைத்து அனுமதிகளையும், உரிமத்தையும் பெற்றிருக்கிறது. இந்த படம் தயாரிக்கத் தொடங்கிய போதே ராம் குமார் அவர்களின் தந்தை மற்றும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராம ராஜ் ஆகியோர் என்னிடத்தில் வந்து இது குறித்து கலந்துரை யாடல் செய்தனர். இதில் மாற்றுக் கருத்துக்களும் வலுவாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.