tamilnadu

img

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடர் இறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா

சர்வதேச செஸ் தொடரான செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் தொடர் இணையம் வழியாக நடைப்பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதியில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினர். தொடக்க சுற்று  2 - 2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றியை தீர்மானிக்க பிளேஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது. பிளே ஆப் டைபிரேக்கரில் 1.5 - 0.5 என்ற புள்ளி கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்திய பிரக்ஞானந்தா வியாழனன்று நடைபெறும் இறுதி போட்டியில் சீன வீரரை எதிர்கொள்கிறார். 

கார்ல்சன் அவுட் '

கடுமையான பார்ம் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் செஸ் உலகின் முதல் நிலை வீரர் கார்ல்சன் (நார்வே) அரையிறுதியில் சீன வீரர் லிரெனிடம் வீழ்ந்தார். இதன் மூலம் செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் சீன வீரர் லிரென் உடன் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா எதிர்கொள்ளவுள்ளார்.

ஐபிஎல் 2022 - இன்று விடுமுறை
வெள்ளியன்று எலிமினேட்டர் 2 ஆட்டம் நடைபெறுகிறது.