tamilnadu

img

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை...

சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விட்டு விட்டு கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக் குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். ஆனால் இந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்படுகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய விட்டு விட்டு மழை தொடரும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.