tamilnadu

img

பெப்சி தொழிலாளர்களுக்கு நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி 

சென்னை 
தென்னிந்தியத் திரையுலகில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர் அனைவரையும் உள்ளடக்கி பெப்சி என்ற சம்மேளனம் உள்ளது. இந்த பெப்சி உறுப்பினர்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினக்கூலிகள்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திரைத்துறை முடங்கியுள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்கள் அன்றாட தேவைக்கு அல்லாடி வருகின்றனர். இவர்களுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோளுக்கு ஏற்ப நடிகர் நடிகைகள் சிலர் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னிந்தியத் திரையுலகில் ஸ்டார் அந்தஸ்தில் வலம் வரும் முன்னணி நடிகையான நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.  
 

;