சென்னை:
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில், “இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குவங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சிகாரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை,நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில்இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.அடுத்த 48 (நவ.5) மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி,திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். ஏனைய கடலோர மாவட்டங்கள், தென்மாவட்டங்கள்மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குநகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையேசென்னையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அனைத்தும்ஊர்ந்து சென்றன.