tamilnadu

மருத்துவப் போராளி... அன்புக்குரிய மருத்துவர்....

மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மறைவு மருத்துவ உலகத் திற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேர் இழப்பாகும். மாணவ பருவத்திலேயே மக்கள் நலனுக்கான இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக பல் வேறு போராட்டங்களில் பங்கேற்று வழி நடத்தியவர். மருத்துவம் மருத்துவ பட்ட மேற்படிப்புகளை சென்னை யில் முடித்தவர். அந்த காலக் கட்டத்தில் பேரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டத்தைநடத்தியவர். மேலும், தனி யார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரான போராட்டத்தில்  தொடர்ச்சியாக 60 நாட்களும் பங்கேற்றவர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களின் அன்றைய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு கொடுத்த னர். மேலும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டமும் நடத்தி யதும் குறிப்பிட தக்கதாகும்.  ஏழை-எளிய மக்களுக்கு மருத்துவம், சுகாதாரம் எளிதில்  கிடைக்க வேண்டும் என்பதில் அதிக அக்கரை கொண்டவர். மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்ததும் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கிராமம் கிராமாக சென்று மருத் துவ சேவை செய்து ஆரம்ப சுகாதார நிலையம் துவங்க வேண்டியதன் அவசியத்தை தமிழக அரசுக்கும் மக்கள் நல் வாழ்வு துறைக்கும் வலியுறுத்தியவர். ‘காட்’ ஒப்பந்தத்திற்கு எதிராகவும் மிக பெரிய அளவில் மருத்துவர்களை அணி திரட்டி போராட்டம் நடத்திய மருத் துவ சங்கத் தலைவர்களில் இவரும் ஒருவர். மருத்து வப் படிப்பிற்கு அகில இந்திய தகுதித் தேர்வு என்ற அறி விப்பிற்கு எதிராக அரசுப் பணியில் இருந்து கொண்டே போர் குரல் எழுப்பிய  மருத்துவர்களில் முதன்மையானவர். இறுதி வரை போர் குணத்துடன் மக்கள் பணியாற்றியவர்.  போராட்டத்தை ஒடுக்க மருத்துவர்கள் நியாயமற்ற பணி மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டது உள்ளிட்ட மக்க ளாட்சி மாண்புக்கு எதிரான, மூர்க்கத்தனமான நடவடிக்கை களால் மிகுந்த வேதனை ஏற்பட்டு மன உளைச்சலுக்குளாகி அவர் இதயம் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டது. மருத் துவ பதம் அவர் மரணத்திற்கு காரணமாக சொல்லப்பட்டா லும் போராட்டத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை களே அவர் மரணத்திற்கு உண்மையான காரணம்.  ஆரம்ப சுகாதார நிலையங்களை தனியார் மருத்துவம னையுடன் இணைத்திட மத்திய நிதி நிலை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் வலுவாக இயங்கி வரும் இத்தகைய நிலையங்கள் தனி யார் வசம் சென்றால் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் மக்க ளுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும். இத்த கைய தவறான முடிவுகளை கைவிட வலுவான மக்கள் இயக்கம் காணவேண்டிய இன்றைய சூழலில் மகத்தான மருத்துவர் சங்கத் தலைவரை இழந்துள்ளோம்.  இந்திய மருத்துவத்துறை சீரமைப்பதற்காக தொடர்ந்து பாடுபட்ட மருத்துவ போராளி, மார்க்சிய சிந்தனையாளர், சிறந்த அறுவை நிபுணர், ஏழை-எளிய மக்களின் அன்புக் குரிய மருத்துவர். அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்ற அவர் லட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து போராட உறுதி ஏற்பது தான் அவருக்கு செலுத் தும் உண்மையான அஞ்சலியாகும்.