tamilnadu

img

தனியார் பள்ளி பேருந்தை முறையாக பராமரித்திடுக சேலத்தில் மாணவர்கள் சாலை மறியல்

 சேலம், ஏப் 27 -சேலத்தில் தனியார் பள்ளி பேருந்தை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா வாழவந்தி பகுதியில் சேர்வராய்ஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்து வெள்ளியன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். முன்னதாக, அக்கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்கனவே கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.இச்சூழலில்தான் தற்போது அந்த பேருந்து கவிழ்ந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், பேருந்துகளை முறையாக பழுதுநீக்கி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஏற்காடு அடிவாரம் குப்பனூர் பகுதியில் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;