tamilnadu

img

வரலாற்றில் இடம் பெறுவது மட்டுமல்ல வரலாற்றை இடம் பெயர்க்கும்... - ஐஷ்வர்யா

சி.ஏ.ஏ ஸே ஆசாதி,
என்.ஆர்.சி.ஸே ஆசாதி
ஹம் சப்கே மாங்கே ஆசாதி...


மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதா னத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேடையிலிருந்து ஒலித்தது நடிகை ஸ்வரா பாஸ்கரின் குரல் இருபதாயிரம் பேரும் அவரோடு இணைந்து ‘ஆசாதி’ என முழங்குகிறார்கள். “நாட்டில் நிலவும் அத்தனை குழப்பங்களையும் சரி செய்யப் புதிய இந்தியாதான் தீர்வு என்றார்கள். ஆனால் இங்கே கூடியிருப்பவர்களின் ஒற்றுமை பழைய இந்தியா இன்னமும் மிச்ச மிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது காந்தியின் இந்தியா, இது பகத்சிங்கின் இந்தியா, இது அஷ்ஃபக்குல்லா கானின் இந்தியா, இது ராம்பிரசாத் பிஸ்மில்லின் இந்தியா. தற்போது இந்த தேசத்தில் புதிய ஜின்னா உருவாகியிருக்கிறார். அவரிட மிருந்து காந்தியையும் நமது அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாகக்வே இந்தப் போராட் டம்” என்று கொடிமின்னல் கீறிச் செல்வது போலத் திருத்தமாகப் பேசுகிறார் ஸ்வரா.

கல்லூரிகளில், நகரங்களில், சிறு சிறு கிராமங்களில் இன்று ஒலித்துக் கொண்டி ருக்கும் ‘ஆசாதி’ என்கிற சொல்லை பாகிஸ்தா னிலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்த வர் பெண் எழுத்தாளர் கமலா பஸின். 1983ல் அப்போதைய பாகிஸ்தான் சர்வாதிகாரி ஜியா உல் ஹக்குக்கு எதிராக முதன்முதலில் திரண்டது அங்கிருந்து பெண்ணிய அமைப்பு கள்தான். அவர்கள் எழுப்பிய ‘ஆசாதி’ கோஷத்தைத்தான் நம்மிடம் கொண்டுள்ளது சேர்த்தார் கமலா.

ஜியாவுக்கு எதிராக மகளிர் அமைப்புகள் ஒருங்கிணைந்ததுபோல, தலைநகரம் தொடங்கி தெற்கே கேரளா,தமிழகம் வரை கரங்களை உயர்த்தி ‘ஆசாதி’ என முழக்க மிட்டபடி இந்தியப் பெண்கள் இந்தப் போராட் டங்களை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கி றார்கள். டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதும் உடனடியாக அவர்களுக்கு ஆதவாக அமர்ந்து போராடத் தொடங்கியது தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன்பாக் பகுதிப் பெண்கள். சாலை களில் அமர்ந்திருந்த அந்தப் பெண்களில், பிறந்து இருபது நாளேயான குழந்தையும் அடக்கம். இந்திக்கு எதிராக ‘மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என விடப்பிடியாகப் போராடிக் கொண்டிருந்த தமிழகமும் குடியுரி மைச் சட்டத்தை எதிர்ப்பதற்காகவே ‘ஆசாதி’ எனக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. “இந்தி கத்துக்க மாட்டோம்னு சொன்னவங்க தான் இன்னிக்கு ‘ஆசாதி’ ன்னு இந்தியில போராட்டம் செய்றோம். உங்களை எதிர்க்க இந்தி என்ன, சைனீஸ்கூடக் கத்துப்போம்” என்று அண்மையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவி வளர்மதி கூறவும், ஒட்டுமொத்தக் கூட்டமும் பேரொலி எழுப்பி ஆமோதிக்கிறது.

மாநிலங்களவையில் குடியுரிமைத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட இரண்டொரு நாள்களிலேயே தெற்கு தில்லியின் மாத்ரி மந்திர் பகுதியில் அறப்போராட்டம் தொடங்கி யிருந்தது. போராட்டத்தின் முன்னணியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அக் ஷரிஸ்தா அன்ஸாரி மற்றும் சந்தனா யாதவ் என்ற இரண்டு  பெண்கள் இருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியிலிருந்து நிர்வாக அலுவல கம் வரை அணிதிரண்டு பேரணி நடத்திய பெண்கள் கூட்டத்தை வழிநடத்திச் சென்றது ஆயிஷா ரென்னா, லடீடா பர்சானா, அக் ஷரிஸ்தா, சந்தனா, தஸ்நீம் ஆகிய ஐந்து பேர்  கொண்ட குழுதான். டெல்லி காவல்துறை ஏற்படுத்திய கலவரத்தில் சக மாணவர் ஷாஹீன் தாக்கப்படாமல் சூழ்ந்து அரணாக நின்று பாது காத்தார்கள் அவர்கள். ‘அவரை அடிக்காதே’ என்று காவல்துறையைப் பார்த்துக் கரங்களை உயர்த்திய ஆயிஷா, போராட்டங்களுக்கு முன்னுதாரணமானார்.

‘எனக்கு அச்சமில்லை, நான் அல்லாஹ் ஒரு வனுக்கே அஞ்சுபவள். பெண்கள் தெருவுக்கு வந்து போராடக்கூடாது என்கிறார்கள். பெண்கள் குரல் உயர்த்திப் பேசக்கூடாது என்கிறார்கள். ஆனால் பெண்களே, அப்படி யிருக்காதீர்கள். அச்சம் கொள்ளாதீர்கள். இது இருத்தலுக்கான போராட்டம். உரிமைக் கான போராட்டம் குரல் உயர்த்திப் போரா டுங்கள்’ என்கிறார் 22 வயது ஆயிஷா. ஆயிஷா  பற்ற வைத்த நெருப்பு புதுச்சேரி பல்கலைக் கழகத்திலும் ஜாதவ்பூர் பல்கலைக்கழ கத்திலும் தழல்விட்டு எரிகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆதர வாக பட்டமளிப்வு விழாவில் தான் பெற விருந்த தங்கப் பதக்கத்தை மறுத்துள்ளார் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி ரபீஹா. “உங்களுக்கு எங்கள் ஆவணங்களைக் காண் பிக்க முடியாது. இன்குலாப் ஜிந்தாபாத்” என்று மேடையேறி ஆக்ரோஷமாகக் கூறுகிறார் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவி தேப்ஸ் மிதா. பிறகு மேடையிலிருந்தவர்களிடம் அனுமதி பெற்று, குடியுரிமைத் திருத்தச் சட்ட நகலைக் கிழித்து எறிந்திருக்கிறார் அவர்.

‘நான் வரலாறு படித்துக் கொண்டிருக்கி றேன் என்று என் அப்பா நினைத்துக் கொண்டி ருக்கிறார். ஆனால் நான் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்கத் தெரியாது’ என்று எழுதப்பட்ட அட்டையை ஒரு கையில் ஏந்தியபடி தங்களைத் துப்பாக்கியு டன் தாக்க வந்த போலீஸிடம் ரோஜாப்பூ நீட்டிய 21 வயது ஸ்ரேயா, தில்லி பல்கலைக்கழக மாணவி. ஒட்டுமொத்த தில்லியிலும் இணை யம் முடக்கப்பட்ட சூழலில் ஸ்ரேயாவைப் போன்ற மாணவர்கள் துப்பாக்கிகளின் முன் ரோஜாப்பூக்களை நீட்டி அதிகாரத்துக்கு முன்பு அன்பை முன்வைத்தார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் அத்தனை குரல்களிலும் தனித்து ஒலித்தது பத்து வயதுச் சிறுமி நேயாவின் குரல். ‘long live unity. long live long live’ என நேயா முழக்கமிட சூழ்ந்திருந்த அத்தனை பேரும் அவளுடன் இண்நது குரல் கொடுத்தார்கள். தற்போது சிறுமி நேயா உட்பட போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை.

பெண்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட் டமும் வரலாற்றில் இடம் பெறுவது மட்டு மல்லாது, வரலாற்றையே இடம் பெயர்த்தி ருக்கிறது.

நன்றி : ஆனந்தவிகடன் (8.1.2020)

;