புதுதில்லி, ஜூன் 5-இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக் கீட்டில் மாற்றம் இருக்காது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதை அடுத்து வரும் ஜுலை 5 ஆம் தேதி நடப்பு நிதி ஆண்டுக்கான முழுபட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்.இது தொடர்பாக நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிர்க்க முடியாத திட்டங் களுக்கு தேவைப்படும் கூடுதல் நிதி மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற பரிசீலிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.