நடிகர் விவேக் பேச்சு
சென்னை,அக்.30- தைரியமான துணிச் சலான மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தான் உள்ளனர் என்று நடிகர் விவேக் கூறினார். சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவ மனையில் திடீரென ஏற்படும் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க மேற்கொண்ட முயற்சியால் 100 நோயாளி கள் காப்பற்றப்பட்டனர். இதுகுறித்த நிகழ்ச்சியில் விவேக் பேசியதாவது:
மனஅழுத்தம் அதிகரித்து விட்டது. நடைபயிற்சியை அநேகம் பேர் குறைத்து விட்டனர். சைக்கிளிலும் செல்வதில்லை. எதற்கெடு த்தாலும் கார், லிப்ட் என பழக்கிக்கொள்கின்றனர். படிகளில் ஏறுவதில்லை. இதனால் உடல் உழைப்பு குறைந்து வருகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்க ளில் பணியாற்றும் இளை ஞர்களில் பெரும்பாலானோ ருக்கு கொழுப்பு, சர்க்கரை அளவு அளவாக இருந்தா லும் திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் மன அழுத்தம்தான்.இது தான் இன்றைய மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்தாக உள்ளது. காரணம் ஒரே இடத்தில் முடங்கி கிடக்கிறார்கள். தொலை க்காட்சி முன்பு மணிக்கண க்கில உட்கார்ந்து விடு கிறார்கள். வெளியே செல்ல வேண்டும், மற்றவர்களோடு பழகவேண்டும், பேச வேண்டும், பொது நிகழ்ச்சி களில் பங்கேற்கவேண்டும்.சிரிக்கவேண்டும். அப்போது தான் மன அழுத்தம் குறையும்.நிறைய தண்ணீர் அருந்தவேண்டும், யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்தாலே மன அழுத்தம் குறைந்து விடும். இதை செய்பவர்கள் அனுபவ ரீதியாக உணர முடியும்.
இந்தியாவில் மருத்துவம் நன்கு வளர்ந்துள்ளது. தலைசிறந்த மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர். உலகில் தைரியமான, துணிச்சலான மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் தான் உள்ளனர். வெளி நாடுகளில் சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு கூட வழக்கு போட்டு விடு வார்கள். இந்தியாவில் அப்படி இல்லை. நமது மருத்துவர்கள் நோயாளி களுக்கு ஏற்படும் பாதிப்பு களை தைரியமாக எதிர்கொண்டு சிகிச்சையை துவக்குகிறார்கள். நம்பிக்கை அளிக்கிறார்கள். எனவேதான் மருத்து வர்களை மக்கள் உயர்வான இடத்தில் வைத்துப்பார்க்கி றார்கள். இவ்வாறு விவேக் பேசி னார். இந்த நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஐயப்பன் பொன்னுசாமி, இதயவியல் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.பி.கோபால முருகன்,நிர்வாக இயக்குநர் அரவிந்த் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.