tamilnadu

img

தமிழகத்தின் தங்க மங்கைக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

தோஹாவில் நடைபெறும் 23வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றிருக்கிறார். இப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கம் கோமதியின் மூலமாகவே கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நெஞ்சார்ந்த வாழ்த்துக் களை உரித்தாக்குகிறது. மிக எளிமையான விவசாய குடும்பச் சூழலில் பிறந்த கோமதிமாரிமுத்து அவர்கள், அண்மையில் தந்தையை புற்றுநோய்க்கு பறிகொடுத்து, பயிற்சியாளரை இதய நோயில் இழந்தார். ஒரு விபத்தில் தானும் காயமுற்று இரண்டாண்டுகள் பயிற்சி எடுக்க முடியாமல் பரிதவித்தார். இவ்வளவுஇடையூறுகளுக்கும் மத்தியில் தங்கம் வென்றது அவருடைய விடா முயற்சியாலும், துணிச்சலாலும்தான். அவர் மென்மேலும் பதக்கங்களை குவித்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது.தமிழக அரசும், மத்திய அரசின் விளையாட்டுத்துறையும் கோமதிக்கும், அவரைப்போன்ற மற்றவர்களுக்கும் அனைத்து விதங்களிலும் ஆக்கமும், ஊக்கமும், பயிற்சியும் அளித்து சர்வதேச அளவில் தமிழ கத்திற்கும், இந்தியா விற்கும் புகழ் சேர்க்க உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மேற்கண்டவாறு கட்சியின் மாநில செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

;