மும்பை:
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்தஜூன் 14 அன்று மும்பையில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது காதலி நடிகை ரியாவிடம் தீவிர விசாரணைக்கு பிறகு கடந்த மாதம் 9 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவுபோலீசார் கைது செய்தனர். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும், காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நடிகை ரியா மற்றும் அவரது தம்பிக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.இதையடுத்து அவர்கள் மும்பை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த வழக்கில் புதனன்று மும்பை உயர்நீதிமன்றம், நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்கியது. அவரதுசகோதரர் சோவிக் ஜாமீன் மனுவை நிராகரித்தது. சுஷாந்த் சிங்கின் ஊழியர்கள் திபேஷ் சாவந்த், சாமுவேல் மிரண்டா ஆகி யோருக்கும் ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது.