சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறுமாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது.இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள்குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1019 ரேஷன் கடைகள் மற்றும் 100 நடமாடும் ரேஷன் கடைகள் என மாவட்டத்தில் மொத்தம்1119 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளுக்கு மாதம் மாதம் அரிசி வழங்க 17 தனியார் மில்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த மில்களுக்கு மாவட்டத்தில் அரசுசார்பில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமித்து வைத்து மாதாமாதம் நெல் மூட்டைகள் பிரித்து அனுப்பப்படுகிறது. இதுபோல் தான் தஞ்சை, நாகை,திருவாரூர் போன்ற நெல் சாகுபடி பரப்பு அதிகம் உள்ள மற்ற மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதில் பிரச்சனை என்னவென்றால் இவர்கள் நெல்லை அரைத்து அரிசியாக்கி அரசு குடோன்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த குடோனில் இருந்து கிராமங்களில்உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி அனுப்பிவைக்கப்படுகிறது. பின்னர் ரேஷன் கடைகளில் இருந்து ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் அரிசி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நபர்கார்டுக்கு 12 கிலோ,2 நபர் கார்டுக்கு 20 கிலோ
அதன் பிறகு அதிகரிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தலா 10கிலோ அதிகமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் 8 பேர் இருந்தால் 80 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இப்படி ரேஷன் கடைகளில் வாங்கப் படும் அரிசியை பெரும்பாலானோர் தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கிராமங்களில் ஒரு சிலர் அரிசியை கோழிக்கு இரையாக போடுகின்றனர். கொரோனா நோய்தொற்று காலங்களில் ரேஷன் அரிசியை கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்தினர்.
ரேசன் அரிசி ஏன் நாற்றம் எடுக்கிறது?
இன்னொரு புறம் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் பலர் அரிசியை வாங்கி புரோக்கர்களிடம் விற்பனை செய்து விடுகின்றனர். புரோக்கர்கள் ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாகசேர்த்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்துவிடுகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சில புரோக்கர்கள் இருக்கின்றனர். இவர்கள் நகர் பகுதியில் ஒரு தெருவில் ஒருவருடன் தொடர்பில் இருப்பார்கள்.அவர்கள் அந்த தெருவில் மாதாமாதம் மொத்தமாக அரிசி வாங்கி சேர்த்து வைத்து விடுகிறார்கள்.சேர்த்து வைக்கப்படும் அரிசியை புரோக்கரிடம் கிலோ ரூபாய் 10 முதல் 15 வரை விற்பனைசெய்யப்படுகிறது. இப்படி வாங்கும் அரிசியை புரோக்கர்கள் தரம் பிரிக்கின்றனர். பச்சரிசி என்றால் முறுக்கு மாவுக்கு விற்பனை செய்கின்றனர். புழுங்கல் அரிசியை மொத்தமாக சேர்த்து அரசு குடோன்களுக்கு அரிசி வழங்கும்மில்களுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதனை சிறிய புரோக்கர்களிடம் மொத்தமாக வாங்கும் பெரிய புரோக்கர்கள் அரசுக்குஅரிசி வழங்கும் மில்களுக்கு விற்பனை செய்கின்றனர். இப்படி கள்ளச் சந்தையில் வாங்கும் அரிசியே மீண்டும் மில்களிலிருந்து அரசு குடோன்களுக்கு வருகிறது. அங்கிருந்து ரேஷன் கடைக்கு வருகிறது. பிறகு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இப்படி மீண்டும் மீண்டும் அதே அரிசி ரேஷன் கடைகளுக்கு வரும் போது நாற்றம் எடுத்து விடுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கிலோ அரிசி ரேஷன் கடையில் விற்பனை செய்த நாளிலிருந்து கள்ளச்சந்தை சென்று மில்லுக்கு சென்று மீண்டும் ரேஷன் கடைவரை இரண்டு மாதம் ஆகிறது. இதேபோல் இரண்டு முறைக்கு மேல் அதே அரிசி செல்லும்போதுஅரிசியில் நாற்றம் வருகிறது. இந்தநாற்றத்தை தேடி வண்டுகள் வந்து விடுகின் றன. இதனால் அந்த அரிசியை உணவுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை ஆகிறது. ரேசனுக்கு வரும் அரிசி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லில்இருந்து வழங்கப்படுகிறது. மாவட்ட நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து,உடன் அதனை முறையாக பாதுகாப்பதில்லைஎன்ற குற்றச்சாட்டு எழுகிறது.
2, 3 நாட்கள் மழையில் நனைந்து விடுகிறது. இதனால் நெல் முளைத்து விடுகிறது.மேலும் மில்லில் நெல்லை முறையாக ஊறவைப்பதில்லை. தினசரி ஊறவைக்க தண்ணீர்மாற்ற வேண்டும்.ஆனால் மில்களில் தொடர்ந்து அதே நீரில் நீண்ட நேரம் ஊறவைக்கின்றனர். இதனால் அரிசி அரைக்கும் போது நாற்றம் ஏற்படுகிறது. சில நேரங்களில்நல்ல அரிசி கிடைக்கிறது. சில நேரங்களில் நாற்றம் அடைந்த அரிசி கிடைக்கிறது.நல்ல அரிசி கிடைத்தால் மக்கள் வாங்கிபயன்படுத்துகின்றனர். நாற்றமான அரிசி கிடைத்தால் அதனை வாங்கி குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். அதிகாரிகள் முறையாக நடவடிக்கை மேற்கொண்டால் முறையாக பொது விநியோகத் திட்டத்தில் நல்ல அரிசி வழங்க முடியும். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர்களிடம் விசாரித்தபோது, “மாவட்டங்களில் விளையும் நெல்லை மட்டுமே நாங்கள் கொள்முதல்செய்து அதனை தனியார் முகவர்களுக்கு கொடுத்து அரிசியாக்கி ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வினியோகம் செய்யப்படுகிறது.
நாற்றம் ஏற்படும் அரிசி தற்போது இல்லை. அப்படி இருந்தால் நாங்கள் உடனே மாற்றம்செய்து கொடுக்கிறோம். தற்போது மக்கள் சன்ன ரக அரிசி வேண்டும் என்று கேட்கின்றனர். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரிசி கடத்தலை தடுக்க போலீஸ்,வருவாய்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கின்றனர். பிடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். ரேஷன் அரிசியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எந்த குற்றச் சாட்டு வந்தாலும் அது குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல அரிசி மக்களுக்கு கிடைக்க நாங்கள் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிடுகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் அதில் ஏற்படும் முறைகேடுகள் குறித்து அரசும், அதிகாரிகளும் உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம் தான் இந்த தவறுகளை தடுத்து நிறுத்த முடியும்.
====ஆரூரான்===