ஓர் எழுத்தாளராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக, மாவட்டச் செயலாளராக, இந்தச் சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக நீண்ட காலம் செயல்பட்டவர் தோழர் ப.ரத்தினம். அக்டோபர் 14 அவரது முதலாவது நினைவு நாள்..மதுரை மாநகர், புறநகர், தேனி,திண்டுக்கல், இராமநாதபுரம் ஆகியஒன்றுபட்டிருந்த மதுரை மாவட்டத் தின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளராகப் பொறுப்பு வகித்து - ஒன்றுபட்ட இந்த விரிந்த மாவட்டத்தின்சங்கப் பணிகளைத் திறம்பட ஆற்றிச்சங்கத்தை வளர்த்தவர் தோழர் ப.ரத்தினம்.
1970 மே மாதம் துவக்கப்பட்ட செம்மலரில் இலக்கியப் படைப்புகள் எழுதிவந்த 35 எழுத்தாளர்கள் 1974-ஆம் ஆண்டு நவம்பர் 23, 24 தேதிகளில்மதுரை திடீர் நகர் போக்குவரத்துத் தொழிலாளர்-மின்சாரத் தொழிலாளர் சங்கங்களின் அலுவலகத்தில் கூடி, செம்மலரில் அதுவரை வெளிவந்த படைப்புகள் பற்றியும் செம்மலரின் வளர்ச்சிப் பற்றியும் விவாதித்ததுடன், புதியதொரு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்குவது பற்றியும் பேசி முடிவுசெய்தனர். செம்மலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடு என்பதால் இயல்பாகவே கட்சியின் தலைவர்களாகிய ஏ.பாலசுப்ரமணியம், எம்.ஆர்.வெங்கட்ராமன், என்.சங்கரய்யா, ஏ.நல்லசிவன் ஆகியோரும்செம்மலர் ஆசிரியர் கே.முத்தையாவும் பங்கேற்று உரையாற்றினர்; வளர்ச்சிக்கான ஆலோசனைகள் வழங்கினர். இந்த மிக முக்கியமான கூட்டத்தில்பங்கேற்ற 35 எழுத்தாளர்களில் தோழர் ப.ரத்தினமும் ஒருவர். புதியதொரு எழுத்தாளர் சங்கம் உருவாக்குவது என்று முடிவு செய்ததற்கு ஏற்ப 1975 ஜூலை 12, 13 தேதிகளில்நாடு முழுவதும் சகல உரிமைகளும்பறிக்கப்பட்ட அந்த எமர்ஜென்ஸி எனும் அவசரநிலை இருண்ட காலத்தில் மதுரையில் தமுக்கம் கலையரங்கில் மிகச் சிரமத்திற்கிடையே முற்போக்கு எழுத்தாளர்களின் முதலாவது அமைப்பு மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. “தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கம்” எனும் இலக்கிய அமைப்பும் அங்கே உருவாக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முதல் மாநாட்டைப் பாராட்டுதலுக்குரிய பெருமுயற்சியுடன் நடத்தித் தந்தது தோழர்கள் அருணன், ப.ரத்தினம், காஸ்யபன் ஆகியோர் தலைமையிலான மதுரை மாவட்டக் குழுவாகும்.
ரத்தினம் சங்கப் பணிகளுடன் செம்மலர் இதழுக்கு இலக்கியப் படைப்புகளும் வழங்கி வந்தார். சொந்த சிறுகதைகளுடன், மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும் செம்மலரில் எழுதியுள்ளார். “இந்தியன் லிட்டரேச்சர்” ஆங்கில இதழிலிருந்து பல சிறுகதைகளைத் தமிழாக்கித் தந்துள்ளார்.மொழிபெயர்ப்புக் கலைக்குச் சிறந்தபங்களிப்பு செய்துள்ளார் ரத்தினம்.வையைச் செழியன் என்ற புனைபெயரில் இவர் எழுதிய, எழுத்தாளர் காஸ்யபன் இயக்கிய “நெஞ்சில் ஓர்கனல்” நாடகம் மதுரையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அரங்கேற்றப்பட்டது.2019 ஆகஸ்ட் 14 அன்று மதுரைநாகமலையில் நடைபெற்ற தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்சங்க கலை-இலக்கிய இரவு நிகழ்ச்சியில் தோழர் ப.ரத்தினம் கௌரவிக்கப்பட்டார். இதுதான் அவர் பங்கேற்றகடைசி நிகழ்வாகும். எழுத்தாளராகிய இவர் வாழ்நாள் முழுவதும் நல்ல இலக்கிய வாசிப்பாளராகவும், ஆர்வமான தீக்கதிர், செம்மலர் வாசகராகவும் இருந்தார். ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக, ஓர் இடதுசாரி இலக்கியப் படைப்பாளியாக, சிறந்தசெயல்பாட்டாளராக, இனிய தோழராக, நண்பராக இறுதிக் காலம்வரைவாழ்ந்த தோழர் ப.ரத்தினம் அவர்கள்உயர்வான போற்றுதலுக்கு உரியவர்.
-தி.வரதராசன்