tamilnadu

img

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...

சென்னை:
அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.