சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓடும் ஆற்றின் பெயர் சியோ நாத். மகாநதி ஆற்றின் துணை ஆறு 365 கி.மீ நீளமுள்ள இந்த ஆற்றின் 23.6 கி.மீ மட்டும் ரேடியஸ்வாட்டர் என்ற நிறுவனத்துக்கு 22 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிறுவனமோ 39 கோடி செலவில் அணை கட்டி தொழிற்சாலைகளுக்கு நீரை விற்பதே நோக்கம் அதற்கு கிடைக்கவிருந்த லாபம் அன்றைய மதிப்பில் 600 கோடி. இந்த ஒப்பந்தம் 2002 வரை அந்த மக்களுக்கு தெரியாது. அணையை கட்டியதும் அந்த நிறுவனம் 16 ஊர்களுக்கு மீன் பிடிக்க தடை விதித்தது. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தடையை மீறி மீன் பிடித்தவர்களின் வலைகளை அறுத்த னர். மக்கள் குளிக்கும் படிகளைச் சுற்றி வேலி அமைக்கப் பட்டது. பாசன நீருக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அரசிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் கிணற்று நீரை கொண்டு பாசனம் செய்தனர். அதுவும் தடைசெய்யப் ட்டது. அதற்கு அந்த நிறுவனம் கிணறுகள் வேண்டும் என்றால் உங்களுடையதாக இருக்கலாம் அதில் இருக்கும் தண்ணீர் எங்களுக்கு சொந்தம் என்றது. மழைநீரை மக்கள் சேமித்து பயன்படுத்தியதுக்கும் தடை விதித்தது அந்த நிறுவனம். மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். 2003 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.
உலக நீர் வரலாற்றில் நீடுழி வாழும் பெயரே கொச்சபம்பா. இது தென் அமெரிக்கா நாட்டில் பொலிவியா வில் உள்ள ஒரு நகரம். இந்த நாடு 1998 ஆம் ஆண்டு உலகவங்கியிடம் 250 லட்சம் டாலர் கடன் வாங்கியது வட்டிக்குத்தான் என்றாலும் தனியார் நிறுவனத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது உலக வங்கி.. 1999 ல் கொச்சபம்பா நீர் விநியோகம் தனி யார்மயமானது. அந்த தனியார் நீர் நிறுவன பெயர் ‘பெக்டேல்’. அந்த நிறுவனம் 200 மடங்கு நீர் கட்டணத்தை உயர்த்தியது. ஒரு குடும்பத்தில் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டணமாக வசூலித்தது. கட்டணம் செலுத்த முடியாத குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வழியற்ற மக்கள் மழைநீரை சேமித்தனர். நிறுவனமோ நீர் என்றால் மழைநீரை சேமித்து வைத்தாலும் நிலத்தில் இருந்து எடுத்தாலும் எங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டணம் விதித்தது. எதிர்த்த மக்களை அடியாட்களை வைத்து அடித்தது அவர்களை வைத்து மழைநீர் தொட்டிகளை உடைத்தது.
செருப்பு தைக்கும் நிறுவன தொழிலாளியான ஒலிவேரா தலைமையில் மக்கள் ஒருங்கிணைக்கப் பட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். மக்களை காக்க வேண்டிய அரசு வழக்கம் போல துப்பாக்கிச்சூடு நடத்தியது. உயிர்ப் பலிக்கு பிறகும் போராட்டம் ஓயவில்லை. 2000 ஏப்ரல் 10 அன்று அந்த நிறுவனம் அலுவலகத்தை காலி செய்தது.
பொலிவிய மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட அந்த பெக்டெல் நிறுவனத்தை தான் இந்திய மாநிலம் ஒன்று வாருங்கள் வாருங்கள் என்று கூட்டி கொண்டு வந்துள்ளது. அவர்களின் விற்பனை நோக்கத்துக்கு ஒரு ஆற்றையும் தூக்கி கொடுத்துள்ளது. அந்த மாநிலம் வேறு எதுவு மில்லை தமிழ்நாடு தான். அந்த மாநகராட்சி திருப்பூர் தான் கொடுக்கப்பட்ட ஆறு பவானி.
ஆசியாவிலேயே நீர் தனியார் மயமாக்கப்பட்ட முதல் மாநகராட்சி திருப்பூர் தான் 2006 ல் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா நாட்டின் முன்னோடி திட்டம் என வருணித்தார். பன்னாட்டு நிறுவ னங்களுடன் ஒப்பந்தம் போடும் முன்பாக உலகின் பிற பகுதிகளில் அந்நிறுவனம் எவ்வாறு நடந்து கொண்டது என்பதை அரசு கவனத்தில் கொள்வதில்லை 228 கி.மீ அப்பால் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நீரை கொண்டுவந்த அரசுக்கு திருப்பூரில் இருந்து வெறும் 56 கி.மீ தொலைவில் உள்ள பவானியில் இருந்து நீரை கொண்டுவர தெரியாதா?
தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க் நகரில் ஒரு காட்சி கடந்த 2005 மார்ச்சில் ஒருநாள் நகரின் குடிசை பகுதி ஒன்றில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றியது மக்கள் அருகில் இருந்த பொது குழாயில் இருந்து நீரை எடுத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தி லேயே குழாய் நீர் நின்று விட்டது. காரணம் அதில் பொருத் தப்பட்டிருந்த ப்ரீபெய்டு மீட்டரில் தொகை தீர்ந்துவிட்டது. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வந்து சேரவில்லை. வேறுவழியின்றி சாக்கடை நீரை அள்ளி தீயை அணைத்து முடித்தாலும், முடிவில் இரு குழந்தைகள் இறந்து போனார்கள். சிறிது காலத்திற்கு முன்னர் தான் பொது குழாய்களில் மீட்டர் பொருத்தும் பணியை செய்து முடித்திருந்தது தனியார் நிறுவனம். அதை பொருத்தா மல் இருந்திருந்தால் முன்பு போல் தொடர்ந்து நீர் வந்தி ருக்கும். குழந்தைகளும் இறந்து இருக்க மாட்டார்கள் என மக்கள் எண்ணினர். தனியார் நிறுவனம் நீருக்காக ஒரு குடிநீர் அட்டை வழங்கியது செல் பேசி ரீசார்ஜ் செய்வது போல் எவ்வளவு லிட்டர் நீர் தேவையோ அவ்வளவு பணம் கட்டி குடிநீருக்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். அட்டையில் பணம் இருக்கும்வரை குழாயில் நீர் கிடைக்கும் பணம் தீர்ந்ததால் குழாயில் நீர் இருந்தாலும் அது வெளிவராது. தனியார்மயத்துக்கு பிறகு நீருக்காக ஏழை மக்கள் ஐந்தில் ஒரு பங்கை நீருக்காக செலவு செய்தனர். அவர்களுடைய ஒரு நாள் வருமானம் நூறு. இந்திய ரூபாய்க்கு சற்று தான் அதிகம். இதைப்பற்றி எல்லாம் நீர் நிறுவனம் கவலைப்படவில்லை கட்டணம் செலுத்துவதில்லை என்றால் இணைப்பை துண்டித்த னர். அதேசமயம் கட்டுப்பாடுகள் அனைத்தும் பொதுமக்க ளுக்கு தான். நீர் பற்றாக்குறை காலங்களில் மக்களுக்கான நீர் விநியோகத்தை 30 சதவீதம் குறைத்துவிட்டு இன்டல் போன்ற தொழில் நிறுவனங்களுக்கு முழுமையாக நீரை தந்தனர். இன்டல் நிறுவனமும் மக்கள் செலுத்துவதை விட 4 மடங்கு குறைவாகவே கட்டணம் செலுத்தியது நீரை தனியார் மயமாக்கும் திட்டம் யாருக்கானது என்பதை தெளிவாக புரிய வைக்கும்.
இந்த அபாயம் தமிழகத்தையும் தொட்டுவிட்டது தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் ராஜீவ்காந்தி அறக் கட்டளைக்கு நிதி உதவியோடும் சட்டமன்ற உறுப்பினர்க ளின் தொகுதி வளர்ச்சி நிதி உதவியோடும் தண்ணீர் மற்றும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன நீரை எடுத்து ஆர்.ஓ முறையில் வடிகட்டி ஆங்காங்கே பெட்ரோல் பங்குகளை போலவே தண்ணீர் பங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க் இயங்கிய தனியார் நிறுவனம் வேறு எதுவும் அல்ல நம் கோவை நகருக்குள் நுழைந்திருக்கும் சூயஸ் தான்.
கோவை நகரத்தின் குடிநீர் தேவையை கடந்த 90 ஆண்டுகளாக அரசே திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. ஆனால் அடுத்து ஒரு முப்பது ஆண்டுகளாக மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் உள்ளாட்சி நிர்வாகம் போன்ற அரசு நிறுவனங்களை புறக்கணித்து உலக அளவில் அழைப்பு விடுத்தது மாநகராட்சி. இதில் சூயஸ் நிறுவனம் தேர்வா னது ஏறக்குறைய 3200 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோவை குடிநீர் இணைப்பு கொடுத்து சூயஸ் நிறுவனம் இனி குடிநீர் வழங்கும் என்று கூறப் படுகிறது.
குடிநீர் வழங்குவதை சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்த அன்றைய மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்தி கேயன் சூயஸ் நிறுவனத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ் பாடினார். சூயஸ் நிறுவனம் தெற்கு ஜெர்மனியில் போட்ட ஒப்பந்தத்தில் போட்டி நிறுவனங்களுடன் கூட்டு களவில் ஈடுபட்டதால் சூயஸ் நிறுவனத்திற்கு 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஆணையம் 853 பில்லியன் யூரோ தண்டனை விதித்தது. மேலும் தனியார் நிறுவனத்தின் கையிலிருந்த நீர் விநியோகத்தை கடந்த 2008ஆம் ஆண்டு ரத்து செய்து பாரீஸ் மாநகராட்சியே ஏற்று நடத்தியது.
நடுவணரசு 2002 தேசிய நீர் கொள்கை முன் மொழிந்தவுடன் முந்திரிக் கொட்டையாக அதைப் பின் பற்றிய முதல் மாநிலம் கர்நாடகம். 2003 இல் உலக வங்கியில் கடன் பெற அது விதித்த முதன்மை நிபந்தனை நீர் தனியார்மயம் என்பதை ஏற்று 2005 - 2006ல் தனது குல்பர்கா, பெல்காம், ஹூக்ளி ஆகிய நகரங்களில் பொது மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி நீர் விநியோ கத்தை முன்பு விவெண்டி என்றழைக்கப்படும் பிரஞ்ச் நிறுவ னமான வயோலியாவிடம் ஒப்படைத்தது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு தண்ணீர் என்று மக்கள் மயக்கப்பட்டனர். மைசூரில் பொது நிறுவனமான வாணி விலாஸ் வாட்டர் ஒர்க்ஸ் நிறுவனத்திடமிருந்து நீர் வினியோகம் டாடா நிறுவனமான ஜஸ்கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
நீர் தனியார்மயம் ஆனதும் பொது குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டன என்பது கவனத்துக்குரியது. பொதுக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன.
தண்ணீர் மீட்டர்கள் பொருத்தப்பட்டன. மீட்டர் பொருத்திய செலவை வட்டியுடன் ஈடு கட்ட, நீர் கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டது. அப்போது 24 மணி நேரமும் நீர் வினியோகம் இருக்கும் என அறிவிப்பு காணாமல் போய்விட்டது. அது 8 மணி நேரமாக குறைந்தது மூன்று ஆண்டுகள் கழிந்தனவே தவிர ஏழைகள் நீர் கட்டணம் செலுத்தவே முடியவில்லை. எனவே அவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தாலியை விற்று தண்ணீர் கட்டணம் கட்டியை கொடுமைகள் நடந்ததுதான் கண்ட பலன்.
பொறுமை தாங்காது போராட்டம் வெடித்தது. தண்ணீர் மீட்டர்களை எல்லா வீடுகளில் இருந்து பிடுங்கி வரப்பட்டு பேரிச்சம் பழத்துக்கு போட்ட போராட்டங்களும் நடந்தன. இறுதியில் மைசூர் மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை ஏற்றது.இதைத்தான் கோவை மாநகர மக்களும் செய்வார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது கோவைக்கு அடுத்து ஈரோடு குறி வைக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒவ்வொரு நகரமாக சுற்றிவளைக்கப்பட்டு இறுதியில் தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் மாபெரும் கனவு புதையலான ‘சென்னை நீர் சந்தை’ கைப்பற்றப்படும்.
வரலாறு ஒன்றை மட்டும் நமக்கு தெளிவுபடுத்துகிறது மக்களின் தொடர் போராட்டங்களால் நீர் நிறுவனங்களை நாட்டை விட்டு பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு ஓட விட முடியும் என்கிறது.
2004 அக்டோபர் 31 என்பது நீர் வரலாற்றில் பொன்னாள் அன்றுதான் உருகுவே நாட்டு மக்கள் நீர் ஓர் உரிமை என்பதை வலியுறுத்தி வாக்களித்தனர். அந் நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் எனில் அதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் இதற்காக மக்கள் பொது வாக்கெடுப்புக்கு தேவைப்பட்ட மூன்று லட்சம் கையெழுத்துக்களை திரட்டி நாடாளு மன்றத்தில் சேர்த்தனர். அரசியலமைப்பு சட்டம் திருத்தப் பட்டது உலக நாடுகளிலேயே முதலாவது ஒரு நாடாகவும் நீர் உரிமை என்று சட்டத்தை இயற்றிய பெருமை பெற்றது.
இந்த சட்டத்தின் விளைவாக சூயஸ் நிறுவனம் அந்நாட்டை விட்டு வெளியேறியது உலக வட்டிக்கடை அதை வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. இந்த வெற்றிக்குக் காரணம் அந்நாட்டு மக்கள். அவர்கள் ஒன்றுபட்டு எழுப்பிய கோரிக்கைகள் மக்களின் இயக்கமாக உருமாறி இதை செயலாற்றியது தமிழக மக்களும் ஒன்றுபட வேண்டிய காலம் கனிந்துள்ளது ஒன்றுபடுவோம் ஒரே குரலில் முழங்குவோம்.