tamilnadu

img

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள் : மெஹபூபா

ஸ்ரீநகர், ஆக.5- காஷ்மீருக்கான சிறப்பு உரிமைச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப் பட்டது குறித்து அம்மாநில முன்னாள் முதல்வரும் பிடிபி தலை வருமான மெஹபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் டுவிட்டரில், “கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா வை 2 தேசங்களாகப் பிரிக்கும் முடிவை ஜம்மு-காஷ்மீரில் உள்ள தலைவர்கள் நிராகரித்தனர். ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க விரும்பியதற்கு எதிராக இது அமைந்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைச் சட்டப் பிரிவு 370ஐ இந்திய அரசு தன்னிச்சையாக நீக்கியுள்ளது அர சமைப்புச் சட்டத்துக்கு விரோத மானது. இந்திய அரசின் இந்த முடிவு துணைக்கண்டத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை  ஏற்படுத்தும். இந்திய அரசின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஜம்மு-காஷ்மீர்  மக்களை அச்சுறுத்தலிலும், பதற்றத்திலும் வைக்கவே இந்திய அரசு விரும்புகிறது.

காஷ்மீருக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப் பாற்றுவதில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.  இந்திய அரசின் நோக்கம் கொடுமையானது. இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்தின் உரு வத்தை மாற்றி, முஸ்லிம் மக்களின் அதிகாரத்தைக் குறைத்து சொந்த மாநிலத்திலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.  ஏற்கெனவே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, யாரையும் சந்திக்க முடியாமல் இருக்கிறோம். நாடாளு மன்றத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள எங்க ளைப் போன்றவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர். இது ‘இந்திய ஜனநாய கத்தின் கருப்பு நாள்.’  இதனால் ஜம்மு - காஷ்மீரில் இந்தியா ராணுவம் ஆட்சி செய்வ தற்கு வழிவகுக்கும். காஷ்மீரின் மக்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி, எங்கள் நிலப்பகுதி யை கைப்பற்ற அவர்கள் விரும்பு கின்றனர். காஷ்மீர் பற்றிய வாக்குறு திகளை காப்பாற்றுவதில் இருந்து இந்தியா தோல்வி அடைந்து உள்ளது என மெஹபூபா கண்டனம் தெரிவித்துள்ளார்.