tamilnadu

img

ரசிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகை

ஐபிஎல் தொடரின் 12-வது சீசனில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.ஞாயிறன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின. ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி ரசிகர் ஒருவரை ஆட்டத்தைக் காண விடாமல் அட்டகாசம் செய்துள்ளார். தட்டிக்கேட்ட அந்த ரசிகரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஆட்டம் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட ரசிகர் ஹைதராபாத் நகர காவல்துறையில் புகார் அளித்தார்.புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை நடிகை பிரஷாந்தி மற்றும் அவருடன் இணைந்து அட்டகாசம் செய்த 5 பேர் மீது 341, 188 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;