tamilnadu

img

நடிகர் ரூபன் காலமானார்

சென்னை:
நடிகரும், எழுத்தாளருமான ரூபன் திடீரென மருத்துவமனையில் உயிரிழந்தார்.முதலில் சின்னத்திரை எழுத்தாளராக திரையுலகில் அறிமுகமான ரூபன். பின்னர், சின்னத் திரையில் நடிகரானார். அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விக்ரமின் தூள் படத்தில் டிடிஆர் ஆக சில காட்சிகளில் நடித்தவர். இது போல ஒரு சில காட்சிகளில் பல படங்களில் நடித்தவர்.திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த ரூபனுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற் பட்டு உள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரூபன் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போதுரூபன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

;