tamilnadu

‘நெற்பயிருக்கு  துத்தநாக சத்து அவசியம்’ வேளாண்துறை விளக்கம்

  தஞ்சாவூர், அக்.3- நெற்பயிருக்கு துத்தநாக சத்தின் அவசியம் குறித்து வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது.   இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்கு நர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெற்பயி ருக்கு நடவு வயலில் இரண்டு முதல் ஐந்து சென்டிமீட்டர் வரை விவசாயிகளால் நீர் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இவ்வாறாக நீரில் மூழ்கி உள்ள நிலங்களில் துத்த நாக சத்து குறைந்த அளவே பயிருக்கு கிடைக்கிறது. நெற்பயி ரில் துத்தநாக அளவு குறையும் போது இளம் இலைகளில் நடு நரம்பு பச்சையமின்றி காணப்படும், வயலில் பயிர்கள் வளர்ச்சி குறைந்தும் சீரற்ற நிலையிலும் காணப்படும்.  பயிர் முதிர்ச்சி அடைவது தாமதப்படுவதால் பயிரின் வயது அதிகமாகும். துத்தநாக சத்து பற்றாக்குறை மிக அதிக மாக இருக்கும் இடங்களில் பயிர்கள் அழிந்துவிடும். சில இடங்களில் பாதிக்கப்பட்ட வயல் திட்டு திட்டாக தோற்றம ளிக்கும். துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தினை கடைசி உழவிற்கு பின் மேலாக இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நெற்பயிர் விரைவில் முதிர்ச்சி அடைந்து நெல் மணி கள் அதிக எடையுடன் கூடுதல் மகசூல் கிடைக்கும்.