tamilnadu

img

உலக தென்னை தினம்

 தஞ்சாவூர், செப்.2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தனித்துவமான தேங்காய்கள் பல ஆயிரம் ஏக்கரில் விளை விக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பயனடைந்த நிலையில், கடந்த ஆண்டு வீசிய கஜா புய லால் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஒரே நாளில் பலரது வாழ்க்கை அதல பாதாளத்திற்கு சென்றது.  இதிலிருந்து இன்னும் விவசாயிகள் மீளவில்லை. அர சின் நிவாரணமும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமை யாக சென்று சேரவில்லை. கடந்த சில மாதங்களாக மீண்டும் தென்னங்கன்றுகள் நட்டு, பழைய நிலைக்கு கொண்டு வர பல்வேறு அமைப்புகள் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒட்டங்காடு கிராமத்தில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு மற்றும் பொது மக்கள் சார்பில் ஒட்டங்காடு பெரியகுளக்கரை, சத்திரம் குளக்கரை ஆகிய இடங்களில், உலக தென்னை தினத்தை யொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னங்கன்று திங்கள் கிழமை நடவு செய்யப்பட்டது.  நிகழ்ச்சியில் ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான திருநெல்வேலி பயிற்சி உதவி ஆட்சியர் எம். சிவகுரு பிரபாகரன் மற்றும் ஐபிஎஸ் அதிகாரியான தில்லி காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சத்தியசுந்தரம் ஆகி யோர் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்து பேசினர். பள்ளி தாளாளர் ஆர்.ஆற்றல், ஆர்.வெங்கடேஷ், பி.நேருதாசன், டி.நீலகண்டன், டி.சந்திரகுமார், பிரபு, ஆசிரியர் என்.கவிமணி, திருநாவுக்கரசு கலந்து கொண்ட னர்.