தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் மத்திய சங்க கும்பகோணம் நிர்வாகிகள் வி. திருநாவுக்கரசு, கே.தாமோதரன் ஆகியோர் பணி நிறைவு பாராட்டு விழா கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். சிஐடியு கவுரவ தலைவர் ஆர்.மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இறுதியில் பணி நிறைவு பெறும் திருநாவுக்கரசு மற்றும் தாமோதரன் சென்னை நிர்மல் பள்ளிக்கு நன்கொடையாக தலா ரூ.5000 வழங்குவதாக அறிவித்தனர்.