tamilnadu

img

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

 தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் புதூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மதிப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்களை பணி நிரந்தரம் செய்து தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், ஒரத்தநாடு வட்டம் புதூர் கிராமம் கோலிகுழிகுளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ்  ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் விஜய், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் குமார், ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், மற்றும்  ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர் வட்டார ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.