tamilnadu

img

பல்கலைக்கழக அறிவியல் கண்காட்சி பரிசு வென்ற இயற்பியல் மாணவி

தஞ்சாவூர், மார்ச் 2-  தஞ்சை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தேசிய அறிவியல் நாள் விழா நடை பெற்றது. இதில் அறிவியலில் மகளிர் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் பல பள்ளிகளிலிருந்து 258 மாண வர்கள் ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகளில் லந்து கொண்டனர். மேலும் இயற்பி யல், புவியியல் உள்ளிட்ட  தலைப்புகளில் பல்கலைக் கழகத்தில் பயிலும் 360 மாணவர்கள் 119 அரங்குக ளில் அறிவியல் கண்காட்சி யை நடத்தினர். நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் செ.வேலுசாமி தலை மையில், மதர் தெரசா பவுண் டேசன் நிறுவனர் முனைவர் ஏ.ஆர்.சவரிமுத்து துவக்கி வைத்தார்.  கண்காட்சியில் முதலா மாண்டு இயற்பியல் துறை மாணவி சினேகிதா சிறந்த படைப்பை உருவாக்கிய தற்காக, அம்மாணவிக்கு அறிவியல் ஆராய்ச்சி செய்வ தற்காக மதர்தெரசா பவுண் டேசன் உதவி செய்யும் என்றார். மேலும் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்திய உணவு பதப்படுத் தும் தொழில்நுட்ப நிறுவனம் பேராசிரியரும், உணவு பதப்படுத்தும் பாதுகாப்பு மய்யத்தின் தலைவருமான ஆர்.சின்னிஜா பரிசு வழங்கி னார். பல்கலைக்கழக முதன் மையர் மனிதவள அறிவி யல் மற்றும் மேலாண்மை பேராசிரியர் அ.ஜார்ஜ் கண்காட்சியை சிறப்பாக செய்திருந்த துறைத் தலை வர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.