தஞ்சாவூர், டிச.18- திருச்சிற்றம்பலத்தில் இருந்து பொக்கன்விடுதி வழியாக செல்லும் களத்தூர் இணைப்பு சாலையை சீரமைத்து தர வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூ ரணி அருகே உள்ள திருச்சிற்றம் பலத்தில் இருந்து பொக்கன் விடுதி வடக்கு, பொக்கன்விடுதி தெற்கு, களத்தூர் கிழக்கு ஆகிய கிராமங்களின் வழியாக களத்தூர் ஆற்றுப்பாலம் வரை இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக திருச்சிற்றம்பலத்தில் இருந்து பேராவூரணி வரை சிற் றுந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பேராவூரணி மற்றும் திருச் சிற்றம்பலத்திற்கு வருவதற்கு அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை இந்த சாலை வழியாகத்தான் விற் பனை செய்வதற்கு வாகனங்களில் கொண்டு வர வேண்டி உள்ளது. இவை தவிர பள்ளி, கல்லூரி களுக்கு செல்லும் மாணவர்களும் இந்த சாலையைத் தான் பயன் படுத்துகின்றனர். பல்வேறு வகை யில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தார்ச்சாலை, ஆங்காங்கே பெயர்ந்து தற்சமயம் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்க ளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், தினமும் பல்வேறு விபத்துகளை சந்திக்க நேரிடு கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றி யச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், “தாமதிக்காமல், திருச்சிற்றம்பலத்தில் இருந்து பொக்கன்விடுதி வழியாக களத் தூர் ஆற்றுப்பாலம் வரை செல்லும் இணைப்பு தார்ச்சாலையை உட னடியாக சீரமைத்து தர அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.