tamilnadu

காயத்துடன்  மயங்கி கிடந்த மயிலுக்கு சிகிச்சை

 தஞ்சாவூர், மார்ச் 2- தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேராவூரணி பகுதியில் காலில் காயத்துடன் சுமார் 4 வய தான ஆண் மயில் மயங்கிக் கிடந்தது. அந்த மயிலை, பேராவூரணியைச் சேர்ந்த மருத. உதயகுமார், பழைய பேராவூரணி மணிகண்டன், திருச்சிற்றம்பலம் அருண் ஆகியோர் மீட்டு பேராவூரணி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு டாக்டர் ஏ.ரவிச்சந்திரன், கால் நடைத் துறை முதுநிலை மேற்பார்வையாளர் இந்திராணி, கால்நடை பராமரிப்பு உதவியா ளர் பாஸ்கரன் ஆகியோர் மயிலுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் இதுகுறித்து, பேரா வூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பறக்கும் போது மரக்கிளையில் மோதி காலில்  அடிபட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரி வித்தனர். பின்னர் உடல்நலம் தேறிய அந்த மயில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால் முன்னிலையில் காப்புக் காட்டில்விடப்பட்டது.