tamilnadu

திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக மீண்டும் முறைகேடு சட்டப்படி தேர்தலை நடத்த அனைத்து கட்சி கோரிக்கை

கும்பகோணம், ஜூலை 17-  தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருபு வனத்தில் சோழன் பட்டு கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட உறுப்பி னர்களால்  தேர்வு செய்யப்பட்ட நிர்வா கக் குழுவிற்கு காலக்கெடு முடிவ டைந்ததால் மீண்டும் நிர்வாகக் குழு விற்கு ஏழு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  ஆனால் இம்முறை ஆளுங்கட்சி யான அண்ணா திமுக பிரதிநிதிகள் தேர்தலில் முறைகேடாக மற்ற கட்சிக்கு வாய்ப்பளிக்காமல் அதிமுக வேட்பா ளர்களை மட்டும் தேர்வு செய்து முறை கேடாக நிர்வாக குழு அறிவிக்கப்பட் டது.  இதனை எதிர்த்து கடந்த 2019 மே 10-ம் தேதி திருச்சி மண்டல தீர்ப்பு ஆணையத்தில் முறையிட்டதன் பேரில் நீதியரசர், நடைபெற்ற முறைகேடாக தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நபர்களையும் ரத்து செய்து ஜூலை 22-ம் தேதி முறையாக தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என உத்தர விட்டார்.  அதன் தொடர்ச்சியாக ஜூலை 15-ம் தேதி தேர்தலுக்காக வேட்பா ளர்கள் மனுத்தாக்கல் நடைபெற்றது. அதில் திமுக, சிபிஎம், சிபிஐ உட்பட அனைத்து கட்சி சார்பில் 22 பேர் மனு தாக்கல் செய்தனர்.  மனுக்களை ஜூலை 16 (செவ்வாய்க்கிழமை) பரி சீலனைக்கு எடுத்துக் கொண்ட போது மீண்டும் அதிமுக கட்சியினர் தலை யீட்டில் அதிமுக வேட்பாளர்கள் 10 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு ஒட்டப்பட்டது. இந்நிலையில் திமுக, தமாகா, சிபிஎம், சிபிஐ கட்சியினரின் மீதி 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதற்கான காரணம் கேட்டு சங்கத்தின் முன் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் சா.ஜீவபாரதி, பக்கிரிசாமி, நாகேந்திரன், சேகர், எஸ்.கே.செல்வம், ராமாச்சாரி, சந்திரா, ராஜலட்சுமி, எஸ்.கே. பஞ்ச நாதன், தமாகா நாராயணசாமி, சிபிஐ மணிமூர்த்தி, சுப்ரமணியன், வெங்கட் ராமன் உள்ளிட்ட அனைத்து கட்சி யினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அதிமுக அதிகா ரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர்களை ரத்து செய்து உயர் அதிகாரிகளை கொண்டு நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும். இல்லையேல் சட்டப் போரா ட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.