tamilnadu

img

வல்லம் ஆனந்தின் மரணத்துக்கு நீதி கேட்டு 4-வது நாளாக நடைபெற்ற போராட்டம் வெற்றி

தஞ்சாவூர், ஆக.30- வங்கி அதிகாரிகள் தந்த நெருக்கடி மற்றும் மிரட்டலால் தீக்குளித்து இறந்த வல்லம் ஆனந்தின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவும், கடனை தள்ளுபடி செய்யவும், தனியார் வங்கி நிர்வாகம் முன்வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் தொடர் போராட்டம் காரணமாக இது சாத்திய மானது.  தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் வள்ளலார் நகரைச் சேர்ந்த ஆனந்த் (40), வெளிநாட்டில் வேலை பார்த்து, ஊருக்கு வந்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு கார ணமாக, மீண்டும் வெளிநாடு செல்ல முடியாமல் ஊரில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.  இவர் வல்லம் நகரில் உள்ள கும்ப கோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிட்டி யூனியன் வங்கியில், வீட்டுக்கடன் பெற்றிருந் தார். இவர் கடனாகப் பெற்ற ரூ.9 லட் சத்துக்கு, அசலும், வட்டியுமாக ரூ.13 லட்சம் செலுத்திய நிலையில், மேலும் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் உடனடியாக செலுத்த வேண்டும் என வங்கி மேலா ளர் மற்றும் அதிகாரிகள் மிரட்டியதால், கடந்த வியாழக்கிழமை மதியம் வங்கி மேலாளரை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது குறிப்பிட்ட தொகையை செலுத்துவதாக ஆனந்த் கூறியும், ஏற்க மறுத்த வங்கி அதிகாரிகள் முழுத் தொகையையும் உடனடியாக செலுத்தா விட்டால், மறுநாள் வெள்ளிக்கிழமை வீட்டை ஏலம் விடப் போவதாக தெரி வித்துள்ளனர்.  இதனால் மனம் உடைந்த ஆனந்த் வங்கி வாசலிலேயே தீக்குளித்தார். இதில் தீக்காயங்களுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மதி யம் உயிரிழந்தார்.  இதையடுத்து, ஆனந்தின் மர ணத்துக்கு காரணமான வங்கி அதி காரிகள் மீது தற்கொலைக்கு தூண் டிய வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். ஆனந்த் குடும்பத்தில் ஒருவருக்கு வங்கிப்பணி வழங்க வேண்டும். ஆனந்தின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் கல்வி, எதிர் காலம் கருதி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை பிரேதப் பரி சோதனைக்கு ஒப்புக் கொள்ள முடி யாது, உடலையும் பெற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி ஆனந்த் மனைவி ஹேமா, அவரது உறவினர்கள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய வற்றின் சார்பில், தீக்குளித்த நாள் முதல் கடந்த 4 தினங்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது.  

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் கோ.நீலமேகம் தலைமையில் நடை பெற்ற காத்திருப்பு போராட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எம்.மாலதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன், நிர்வாகி என்.சிவகுரு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன், ராஜன், நகரக் குழு உறுப்பினர்கள் கரிகாலன், வடிவேலன் மற்றும் ஆனந்தின் மனைவி மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட னர்.  இதையடுத்து, அங்கு வந்த தஞ்சா வூர் வருவாய் கோட்டாட்சியர் வேலு மணி, டிஎஸ்பி.,க்கள் சீதாராமன், பாரதி ராஜா, மற்றும் வங்கி அலுவலர்கள், சமா தானப் பேச்சுவார்த்தை நடத்தியதில் வீட்டுக்கடன் பாக்கி ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 287-ஐ தள்ளுபடி செய்து, அதற்கான ஆவணங்களை திருப்பித் தருவதாகவும், ஆனந்த் குடும்பத்திற்கு இழப்பீடாக தனியாக ரூ.5 லட்சமும் தருவதாக வங்கித்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தொட ர்ந்து ஆனந்தின் உடல் பிரேதப் பரி சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.